புதுடெல்லி: இந்தியாவில் கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது. தினமும் ஐந்து இலக்கத்தில் இந்த பாதிப்பு பதிவாகி வரும் நிலையில், அன்றா டம் கிருமிப் பரவலும் உயிரிழப்பும் அதிகரிப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.
இந்த கிருமி பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் இதுவரை இத்தொற்றால் 4,73,105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
"கடந்த புதனன்று மட்டும் 16,922 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதியானது. 418 பேர் மரணம் அடைந்த நிலையில், இவர்களையும் சேர்த்து இத்தொற்றால் உயிரி ழந்தோர் எண்ணிக்கை 14,894 பேராக அதிகரித்துள்ளது. உயிரி ழப்பு விகிதத்தில் இது 3.2% ஆகும்.
"இதுவரை 2,71,697 பேர் இந்த கிருமி பாதிப்பில் இருந்து குணம டைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 57.4% ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் 1,86,514 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
"அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,42,900 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 70,390 பேருக்கும் தமிழகத்தில் 67,468 பேருக்கும் குஜராத்தில் 28,943, ராஜஸ்தானில் 16,009, மத்தியப் பிரதேசத்தில் 12,448 பேருக்கும் இத்தொற்று உள்ளது," என்று குறிப்பிட்டுள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்றுச் சம்பவங்களின் அடிப்படையில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. ஆசியாவில் கிருமித்தொற்று பரவலின் மிகப்பெரிய மையமாகவும் உலகின் நான்காவது மோசமான பாதிப்புக்குள்ளான நாடாகவும் இந்தியா உரு வெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

