ஐந்து மண்டலங்களில் ஐந்து ஆயிரத்தைக் கடந்த கிருமி பாதிப்பு

1 mins read
9cdcf15a-159d-4a50-a7c5-77044eef5857
சென்னையில் ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் கொரோனா நோயாளி களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்து வர்கள், தாதியர்கள், சுகாதாரப் பணியாளர் களின் அர்ப்பணிப்பும் கொரோனாவை அழித்தொழிக்க தமிழக அரசு எடுத்துவரும் துரித நடவடிக்கைகளும் விரைவில் தமிழகத்தை விட்டு ெகாரோனா கிருமியை ஓடவைத்து விடும் என்று சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தின் தலை­ந­கர் சென்­னை­யில் ஒவ்­வொரு நாளும் பாதிப்­பும் பலி­யும் அதி­க­ரித்­துக்­கொண்டே வரு­கின்­றன.

கொரோனா தொற்­றைக் கட்­டுப்­படுத்த பல நட­வ­டிக்­கை­க­ளை­யும் முடுக்­கி­விட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

இருப்பினும் நோய் பாதிப்பு தொடர்ந்து அதி­க­ரித்த வண்­ணமே உள்ளது.

சென்­னை­யில் கொரோனா பாதிப்பு விவ­ரத்தை மண்­ட­லம் வாரி­யாக மாந­க­ராட்சி நிர்­வா­கம் வெளி­யிட்டு உள்­ளது.

நேற்று 26ஆம் ேததி காலை நில­வ­ரப்­படி இந்­தப் பட்­டி­யல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

சென்ைன­யில் உள்ள 5 மண்­ட­லங்­களில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 5 ஆயி­ரத்­தைக் கடந்­துள்­ளது. ராய­பு­ரத்­தில் 7 ஆயி­ரத்தை நெருங்கி உள்­ளது. இது மாந­கர மக்­க­ளி­டையே பதற்­றத்தை ஏற் ­ப­டுத்தி உள்ளது.

மாந­க­ராட்சி நிர்­வா­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், ராய­புரத்­தில் அதி­க­பட்­ச­மாக 6,951 பேரும் தண்­டை­யார்­பேட்­டை­யில் 5,717 பேரும் அண்ணா நக­ரில் 5,260 பேரும் தேனாம் பேட்­டை­யில் 5,534 பேரும் கோடம்­பாக்­கத்­தில் 5,216 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மாநி­லத்­தில் நேற்று கிரு­மிப் பர­வ­லால் பாதிப்பு அடைந்த 3,509 பேரில் 1,834 பேர் சென்­னை­யைச் சேர்ந்­த­வர்­கள்.

இவர்­க­ளை­யும் சேர்த்து சென்­னை­யில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 47,650 ஆக உயர்ந்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் பலி எண்­ணிக்கை 911 ஆக உயர்ந்­துள்­ளது என்­றும் தமி­ழக சுகா­தா­ரத்­துறை அறி­வித்­துள்­ளது.