இந்தியா: ராணுவத்தினர் பழைய நிலைக்குத் திரும்ப நாளாகும்

2 mins read
4becea84-fa9a-44aa-890c-552a881006a0
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராம்நாத் சிங் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முப்­ப­டை­க­ளின் தலை­மைத் தள­பதி பிபின் ராவத்­து­டன் விமா­னப்­படை, கப்­பற்­ப­டை­க­ளின் தள­ப­தி­களும் பாது­காப்பு அமைச்­சின் உய­ர­தி­கா­ரி­களும் பங்­கேற்­ற­னர். -

புது­டெல்லி: இந்­தியா-சீனா எல்­லை­யில் உள்ள லடாக் பகு­தி­யில், ராணுவத்­தி­னர் பழைய நிலைக்­குத் திரும்­பு­வ­தற்கு நாளா­கும் என்று இந்­திய ராணு­வம் தெரி­வித்­துள்­ளது.

இரு நாட்டு ராணு­வங்­க­ளுக்கு இடை­யில் தள­ப­தி­கள் நிலை­யில் திங்­கட்­கி­ழமை பேச்­சு­வார்த்தை நடந்­தது. அதற்­குப் பிறகு உயர்­மட்ட ராணுவ அதி­கா­ரி­கள் நிலை­யில் பேச்­சு­வார்த்தை இடம்­பெ­ற­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சீன ராணு­வத்­தின் மீது இந்­திய ராணு­வத்­தி­னர் கொண்­டி­ருந்த நம்­பிக்கை இப்­போது பெரி­தும் குறைந்து இருக்­கிறது என்று தக­வல் வட்­டா­ரங்­கள் கூறின.

லடாக் பகு­திக்கு இரண்டு நாள் வருகை மேற்­கொண்­டி­ருந்த இந்திய ராணு­வத் தலை­வர் ஜென­ரல் எம்எம் நர­வனே, எல்லை நில­வ­ரங்­கள் பற்றி இந்­திய அர­சி­யல் தலை­வர்­களுக்கு விளக்­கம் அளிப்­பார் என்று நேற்று எதிர்­பார்க்­கப்­பட்­டது.

சீனா ஒரு பக்­கம் பேச்­சு­வார்த்­தைக்கு முன்­வந்­தா­லும் எல்­லை­யின் பல இடங்­க­ளி­லும் துருப்­பு­க­ளைக் குவித்­துள்ளதாக இந்­திய தரப்­பில் கூறப்­ப­டு­கிறது. அதே­போல இந்­திய ராணு­வ­மும் லடாக் எல்­லைப் பகுதி­யில் படை­ப­லத்­தைக் குவித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், லடாக் எல்­லைப் பகு­தி­யில் அண்­மை­யில் சீனா நடந்து­கொண்ட விதம் அந்த நாடு தன்­னு­டைய பக்­கத்து நாடு­க­ளுக்கு எதி­ராக பெரிய அள­வில் நடத்­தும் ராணுவ கோப­மூட்­டும் செயல்­க­ளின் ஒரு பகுதி என்று அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது.

அமை­தி­யான நாடு­களை ராணுவ ரீதி­யில் யார் மிரட்­டி­னா­லும் அதை அமெ­ரிக்கா சகித்­துக்­கொள்­ளாது என்று அந்த நாட்­டின் பிர­ப­ல­மான நாடா­ளு­மன்ற பேரா­ளர் டெட் யோஹோ தெரி­வித்­தார்.

அத்­த­கைய காரி­யங்­களை நிறுத்­திக் கொள்­ளும்­படி உல­கம் எல்­லாம் ஒன்று சேர்ந்து சீனா­வி­டம் கூறு­வ­தற்கு இது தக்க தரு­ணம் என்று அவர் தெரி­வித்­தார்.

கொவிட்-19 சூழலைத் தனக்குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக் கொண்டு சீன கம்­யூ­னிஸ்ட் கட்சி பரந்த அள­வி­லான ராணுவ நட­

வ­டிக்­கையை அரங்­கேற்றி வரு­கிறது என்­றும் இந்­தியா, ஹாங்­காங், தைவான், வியட்­னாம் ஆகி­யவை அந்த நட­வ­டிக்­கை­யின் இலக்கு என்­றும் யோஹோ கூறி­னார்.