புதுடெல்லி: இந்தியாவுக்குள் இறக்குமதியான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சீனப் பொருள்கள், சுங்கத்துறை கெடுபிடி காரணமாக துறைமுகங்களில் தேங்கிக் கிடக்கின்றன.
அவற்றின் மீதான 100% சோதனையை ஓரளவு தளர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சு அதிகாரிகள் கூறினர். நிறுவனங்களின் உத்தரவாதத்தின் பேரில் ஒரு பகுதி சோதனைக்குப்பின் சீன பொருள்களை விடுவிக்க முடிவெடுக்கப்பட்டது.

