சென்னை: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாரும் ஒரே அணியில் திரண்டு மக்கள் நலன் காப்பதற்காகப் பாடுபட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தில் 82,275 ஆகவும் சென்னையில் 53,762-ஆகவும் அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தொற்று அறிகுறி இருப்பவர், இல்லாதவர் என்ற பேதம் பார்க்காமல் அனைவரையும் பரிசோதிக்கவேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள். தொற்றுள்ள பகுதிகளை மற்ற பகுதியில் இருந்து தனியாகப் பிரித்து, அரண் போலத் தடுத்து, அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்துங்கள்.
“வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு மாதம் ரூ.5,000 கொடுக்க வேண்டும். மக்களைக் காக்கும் மருத்துவர்களையும் தாதி யர்களையும் அரசு பாதுகாக்கவேண்டும். பரிசோதனைகளை மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா ஒழிப்புப் பணியில் தமிழக அரசுக்கு ஆலோசனைகள் எதுவும் கூறவில்லை என முதல்வர் பழனிசாமி வெளியிட்டிருந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், 50க்கும் மேற்பட்ட தனது அறிக்கைகளை ஒவ்வொன்றாகத் தொலைக்காட்சியில் எடுத்துக்காட்டி விளக்கமளித்தார்.
தமிழக மக்களின் நலன் காக்கப்படும் வரை தாம் முதல்வருக்கு ெதாடர்ந்து ஆலோசனைகளைச் சொல்ல உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதற்கிைடயே, குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானாலும், அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணை யர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அவர்கள் 14 நாட்களும் மருத்துவ மனைகளிலோ, பாதுகாப்பு மையங் களிலோ அல்லது அவர்களின் வீடுகளிலோ தனிமைப்படுத்தப்படு வார்கள் என்றும் அவர் கூறினார்.