சென்னை: தமிழகத்தில் ஒருபக்கம் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மற்றொரு பக்கத்தில் இத்தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மக்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா கிருமிப் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50,000 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலம் எங்கும் செவ்வாய் கிழமையுடன் 24 மணி நேரத்தில் புதிதாக 3,943 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, இத்தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களின் மொத்த எண்ணிக்கை 90,167 ஆக அதிகரித்துள்ளது.
இதில் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களும் அடங்குவர்.
கிருமியால் பாதிக்கப்பட்டவர்களில் 38,889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருப்பினும், இக்கிருமித் தாக்குதலுக்கு இதுவரை தமிழகத்தில் 1,201 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், மருத்துவத்துறை யினரின் அர்ப்பணிப்பால் மாநிலம் முழுதும் கொவிட்-19 கிருமி பாதிப்பில் இருந்து 50,074 பேர் மீண்டுள்ளனர். சென்னையில் மட்டும் இத்ெதாற்றில் இருந்து 34,828 பேர் குணமடைந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை பட்டியலை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரியலூர்-462, செங்கல்பட்டு- 5,419, சென்னை-58,327, கோவை- 538, கடலூர்-1,073, தர்மபுரி-81, திண்டுக்கல்-472, ஈரோடு-157, கள்ளக்குறிச்சி-850, காஞ்சிபுரம்-1,977, கன்னியாகுமரி-368, கரூர்-140, கிருஷ்ணகிரி-140, மதுரை-2,557, நாகை-254, நாமக்கல்-99, நீலகிரி-89, பெரம்பலூர்-158, புதுக்கோட்டை-174, ராமநாதபுரம் - 839, ராணிப்பேட்டை-754, சேலம் - 780, சிவகங்கை-241, தென்காசி-347, தஞ்சாவூர்-448, தேனி-702, திருப்பத்தூர்-172, திருவள்ளூர்-3,830, திருவண்ணாமலை-1,824, திருவாரூர்-455, தூத்துக்குடி-943, திருநெல்வேலி-796, திருப்பூர்-180, திருச்சி- 682, வேலூர்-1,308, விழுப்புரம்-915, விருதுநகர்-493, விமானநிலைய கண்காணிப்பில் வெளிநாட்டினர் 385 பேரும் உள்நாட்டினர் 332 பேரும் ரயில் நிலைய கண்காணிப்பில் 406 பேரும் என ஆக மொத்தம் 90,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை விவரம் தெரிவித்துள்ளது.
கொரோனா கிருமி பரவாமல் தடுக்கும் வகையில், தனது முகம், உடல், தலையில் வேப்பிலைச் சாந்தை அரைத்துப் பூசியுள்ள சென்னை குடியிருப்பா
ளரிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் உடல்நலம் குறித்து விசாரிக் கின்றனர்.
படம்:
ஏஎஃப்பி

