கொரோனா தொற்றால் உயிரிழந்த பலரது உடல்களை ஒரே குழியில் வீசும் அவலம்

கர்நாடகாவில் உள்ள பெல்லாரியில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பலரது சடலங்களை மொத்தமாக ஒரே குழியில் போட்டு அடக்கம் செய்வதாக கர்நாடகாவின் முன்னாள் அமைச்சர் டி.கே. சிவகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் காணொளியை வெளியிட்டு தமது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஆனால், சில இடங்களில் அந்த நெறிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதில்லை.

கொரோனா பிரச்னையை அரசு எவ்வாறு கையாள்கிறது என்பதை இந்த காணொளி பிரதிபலிப்பதாக விமர்சித்துள்ளார் அவர்.

மீண்டும் இதுபோல் நிகழாதிருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!