புதுடெல்லி: இந்தியாவில் கொவிட்-19 கிருமித்தொற்று, ஒரே நாளில் 24,850 பேரிடம் பரவி புதிய உச்சம் தொட்டுள்ளது.
நாளும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் இந்த கிருமித் தொற்றால் இந்தியாவில் 6.73 லட்சம் பேரும் தமிழகத்தில் 1.07 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட்-19 கிருமித்ெதாற்று பரவாமல் முறியடிக்க இந்திய நாடெங்கும் மத்திய, மாநில அரசு கள் அதிகளவிலான பரிசோதனை களையும் ஊரடங்கு விதிமுறை களையும் முடுக்கிவிட்டுள்ளன.
இருப்பினும், கிருமித்தொற்று மக்கள் மத்தியில் பரவும் வேகம் சற்றும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக மத்திய சுகா தாரத்துறை அமைச்சகம் வெளி யிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, “இந்தியாவில் இந்தக் கிருமியின் வேகம் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் நேற்று காலை வரை 24,850 பேருக்கு பரவி புதிய உச்சம் தொட்டுள்ளது.
“அதேபோல், ஒரேநாளில் 613 பேர் உயிரிழந்துள்ளனர்.
“இதன் காரணமாக, இதுவரை கொவிட்-19 கிருமித்தொற்றால் 6,73,904 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,279 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
“ஒரேநாளில் 14,743 பேர் குண மடைந்த நிலையில், இதுவரை மொத்தம் 4,09,062 பேர் குண மடைந்துள்ளனர். தற்போது 2,45,497 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
“மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 7,074 பேருக்குப் பாதிப்பு உறுதியான நிலையில், மொத்தம் 2,00,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 8,671 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில், 1,08,082 பேர் குண மடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
“தமிழகத்தில் ஒரே நாளில் நேற்று காலைவரை 4,280 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, இம்மாநிலத்தில் இது வரை 1,07,001 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன், 1,450 பேர் மரணம் அடைந்துள்ளனர். இது வரை 60,592 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
“டெல்லியில் 97,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 3,004 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
“குஜராத் மாநிலத்தில் இதுவரை 35,398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,926 பேர் மரணம் அடைந்துள்ளனர். உ.பி. மாநிலத்தில் 26,554 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 773 பேர் மரணம் அடைந்துள்ளனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.