புதுடெல்லி: உலகளவில் அதிக அளவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவை முந்திக் கொண்டு மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளது இந்தியா.இதனால் கொவிட்-19 கிருமித் தொற்று பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக மூன் றாவது இடத்தில் உள்ளது.
இந்திய நாடெங்கும் கொவிட்-19 உயிர்க்கொல்லி கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதன்படி, இந்தியாவில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏழு லட்சத்தை நெருங்கி உள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக கொரோனா தரவு மையம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கொவிட்-19 கிருமித்தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த ரஷ்யாவை இந்தியா முந்தி உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் நேற்றைய நிலவரப்படி இத்தொற்றால் 6,80,283 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அமெரிக்கா வில் 28 லட்சம் பேரும் பிரேசிலில் 15 லட்சம் பேரும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தொடர்ந்து மூன்றா வது நாளாக 20,000க்கும் அதிக மானோருக்கு தொற்று பாதித்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நேற்றுகாலை வரை தொற்று பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர் களின் எண்ணிக்கை 24,850 ஆக உயர்ந்துள்ளது. இவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,97,836 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 2,53,162 பேர் கிருமிப் பரவலுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 4,24,891 பேர் நோய்த்தொற்றில் இருந்து குண மடைந்து உள்ளனர்.
அதேவேளையில், இத்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 19,700 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் உள்ள மொத்த பாதிப்பில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, தெலுங்கானா, கர்நாடகம், அசாம், பீகார் ஆகிய ஏழு மாநிலங் களில் மட்டுமே 78% பாதிப்புகள் உள்ளன. மீதமுள்ள 22% பாதிப்பு மற்ற மாநிலங்களில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்புள்ள 2,00,064 மக்களுடன் முதலிடத்தில் இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நேற்றுகாலை வரை, இங்கு 7,074 பேருக்கு தொற்று இருந்தது உறுதியானது. 8,671 பேர் பலியான நிலையில், 1,08,082 பேர் குணமடைந்துள்ளனர்.
மத்திய அரசு அறிவித்துள்ள மாநிலங்களின் பட்டியல்படி, தமிழ் நாட்டில் 1,11,151, டெல்லி-99,444, குஜராத் 36,037, உத்தர பிரதேசம்- 27,707, மேற்குவங்காளம்-22,126, தெலுங்கானா 23,902, ராஜஸ்தான் 20,164, மத்திய பிரதேசம்-14,930, கர்நாடகா-23,474, ஹரியானா-17,005 பேரும் கிருமித்தொற்றால் அதிகள வில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.