திருவனந்தபுரம்: கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக நேற்று காலை 6 மணி முதல் ஒருவார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக திருவனந்தபுரம் மாநகராட்சி திடீர் அறிவிப்பை வெளியிட்டது.
இதையடுத்து, தலைமைச் செய லகம் மூடப்பட்டதால் முதல்வரின் குடியிருப்பிலேயே முதல்வரின் அலுவலகம் செயல்பட்டது.
இதுபோல நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. அவசர, அத்தியா வசியத் தேவைகளைத் தவிர பொதுமக்கள் வெளியில் நடமாட வும் தடை விதிக்கப்பட்டது.
கேரளாவில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 5,429 ஆகவும் பலியானோர் எண்ணிக்கை 25 ஆகவும் உள்ளது. 3,048 பேர் குணம் அடைந்துள்ளனர். 2,131 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த தொற்று சமூகப் பரவல் நிலையை நெருங்கி விட்டதாக கேரள அரசு வெளிப்படை யாக அறிவித்துள்ளது.
இதையடுத்து, கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி யைப் பின்பற்றுவதைக் கடைப் பிடிக்காவிடில் இரு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதிக்கும் வகையில் அதிரடியாக அவசர சட்டம் ஒன்றைக் கேரள அரசு கொண்டு வந்துள்ளது.
இந்தச் சட்டத்தின்படி, திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படு வர். துக்க நிகழ்வில் 20 பேர் மட்டுமே பங்கேற்க இயலும்.
இந்த அவசர சட்டம் ஒரு ஆண்டுக்கு அல்லது புதிய உத்தரவு வரும் வரையில் நடைமுறையில் இருக்கும். இந்த திருத்தங்களில் எதை மீறினாலும் அவர் களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும்.