சீன எல்லையில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் இந்திய விமானப் படை

2 mins read
7a14cbd2-eaa8-4b31-a307-e3708e6d2e8f
தமது படைபலத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்திய ராணுவத்தின் போர் விமானங்களையும் லடாக் வான் பகுதியில் வலம் வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஏராளமான வீரர்களையும் எல்லைப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படம்: இபிஏ -

லடாக்: சீன எல்­லைப் பகு­தி­யில் தொடர்ந்து கண்­கா­ணிப்பை இந்­தியா தீவி­ரப்­ப­டுத்­தி­ வருகிறது. நேற்று இரவு எல்­லை­யில் தீவி­ரக் கண்­கா­ணிப்­புப் பணி­யில் இந்­திய விமா­னங்­கள் ஈடு­பட்­டன.

போர் விமா­னங்­க­ளான மிக் -29, சுகோய் 30 எம்.கே.ஐ. அப்­பாச்சி தாக்­கு­தல் ரக விமா­னங்­கள் தீவிர கண்­கா­ணிப்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் இந்­தியா, சீனா இடை­யி­லான மோதல் மட்­டு­மல்­லா­மல் எந்த நாட்­டின் பிரச்­சி­னை­யி­லும் வலி­மை­யான நட்­பு­ற­வுக்கு அமெ­ரிக்க ராணு­வம் தொடர்ந்து துணை நிற்­கும் என்று அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது.

தென்­சீ­னக் கட­லில் பல தீவு­களை சீனா ஆக்­கி­ர­மித்து வரு­வ­தாக பிலிப்­பீன்ஸ், தைவான், புருணை உள்­ளிட்ட நாடு­கள் குற்­றம்­சாட்டி வரு­கின்­றன. அதைத்­தொ­டர்ந்து தென்­சீ­னக் கடல் பகு­திக்கு இரு விமா­னம் தாங்­கிக் கப்­பல்­களை அமெ­ரிக்கா அனுப்பி வைத்­துள்­ளது.

கடந்த மாதம் 15ஆம் தேதி நடந்த கல்­வான் பள்­ளத்­தாக்­கு மோத­லில் இந்­திய வீரர்­கள் 20 பேர் வீர மர­ணம் அடைந்­த­னர்.

எல்­லை­யில் சீனா கூடு­தல் படை­க­ளைக் குவித்­ததை அடுத்து இந்­தி­யா­வும் அங்கு படை­பலத்தை அதி­க­ரித்­த­தால் பதற்­றம் நில­வி­யது. ராணு­வத் தள­பதி நர­வானே அண்­மை­யில் லடாக் பகு­திக்­குச்­சென்று அங்­குள்ள நில­வ­ரத்தை ஆய்வு செய்­த­பின், பிர­த­மர் நரேந்திர மோடி கடந்த வெள்­ளிக்­கி­ழமை அப்பகு­திக்­குச் சென்று எல்­லைப் பாது­காப்பு குறித்து உயர் அதி­கா­ரி­க­ளு­டன் ஆலோ­சனை நடத்­தி­னார்.

இதற்­கி­டையே பதற்­றத்­தைத் தணிக்­கும் முயற்­சி­யாக நடந்த பேச்சு­வார்த்­தைக்­குப் பின் இரு­த­ரப்­பும் படை­களை விலக்­கிக்­கொண்­டுள்­ளன. எல்­லைக் கட்­டுப்­பாட்டு கோட்­டுப் பகு­தி­யில் இருந்த சீனப் படை­அங்­கி­ருந்து சுமார் 2 கிலோ மீட்­டர் தூரம் பின்­வாங்­கியது. அத்துடன் அங்கிருந்த கூடா­ரங்­கள், தற்­கா­லி­கக் கட்­டு­மா­னங்­க­ளை­யும் அவர்­கள் அகற்­றி­னர்.