புதுடெல்லி: இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை
20 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 7,19,665 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 22,252 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 467 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,160 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 2.8% ஆக உள்ளது.

