புதுடெல்லி: இந்தியாவில் கொவிட்- 19 கிருமித்தொற்று அசுர வேகத்தில் மக்களைப் பீடித்து வருகிறது.
இத்ெதாற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில், புதனன்று காலை வரை 24 மணி நேரத்துக்குள் 24,879 பேருக்கு தொற்று பரவி இருந்தது உறுதியானது.
இவர்களையும் சேர்த்து இந்தியாவில் 7,67,296 பேர் கொவிட்-19 கிருமிப் பரவலால் பாதிக்கப்பட் டுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கையும் 21,129 பேராக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 4,76,378 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை மேலும் புதிதாக 3,756 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, மாநிலத்தில் இதுவரை 1,22,350 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், புதன்கிழமை வரை ஒரேநாளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 64 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, மாநிலத்தில் இதுவரை இத்ெதாற்றால் 1,700 பேர் உயரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 72,500 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, இங்கு இப் பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. இருப்பினும், சென்னையில் கடந்த சில தினங்களாகவே இப் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 74,167 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,23,724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,448 பேர் பலியான நிலையில் 1,23,192 பேர் குணமடைந்துள்ளனர்.
மத்திய அரசின் அறிவிப்பின்படி, டெல்லி-1,04,864, குஜராத்-38,333, உத்தரப்பிரதேசம்-31,156, மேற்கு வங்கம்-24,823, தெலுங்கானா-29,536, ராஜஸ்தான்-22,063, மத்தியப் பிரதேசம்-16,036, கர்நாடகா-28,877, ஹரியானா-18,690 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.