கொவிட்-19 அச்சத்தால் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்

கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகத்தின் பேரில் ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த இரக்கமற்ற செயல் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்தது.

அண்மையில் டெல்லியில் இருந்து ஷிகோகாபாத்துக்குச் சென்ற பேருந்தில் 19 வயதான அன்ஷிகா யாதவ் என்ற இளம்பெண் தன் தாயாருடன் பயணம் செய்துள்ளார்.

அப்போது அவரிடம் கிருமித் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதாக சக பயணிகளில் சிலர் சந்தேகமடைந்தனர். இதையடுத்து திடீரென அப்பேருந்து நிறுத்தப்பட்டது.

ஓட்டுநரும் நடத்துநருமாகச் சேர்ந்து அப்பெண்ணுக்கு ஒரு போர்வையைப் போர்த்தி, பின்னர் குண்டுக்கட்டாகத் தூக்கி பேருந்துக்கு வெளியே வீசினர்.

தனது மகளை விட்டுவிடுமாறு அன்ஷிகாவின் தாயார் கதறியுள்ளார். அதைப் பொருட்படுத்தாத சக பயணிகள் அன்ஷிகாவைப் பேருந்தில் இருந்து வெளியேற்றுவதில் உறுதியாக இருந்துள்ளனர்.

நெடுஞ்சாலையில் தூக்கி வீசப்பட்ட அன்ஷிகா அடுத்த சில நிமிடங்களில் அங்கேயே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான செய்தி உத்தரப்பிரதேசத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து டெல்லி மகளிர் ஆணையம் போலிசில் புகார் அளித்ததின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

பிரேதப் பரிசோதனையில் அன்ஷிகா மாரடைப்பால் இறந்தது உறுதியாகி உள்ளது.

தனது சகோதரி ஆரோக்கியமாக இருந்ததாகவும் சம்பவத்தன்று கடும் வெயில் நிலவியதால் அவர் சோர்வுடன் காணப்பட்டதாகவும் அன்ஷிகாவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!