375 பேரிடம் தடுப்பு மருந்து பரிசோதனை தொடங்கியது

375 பேரிடம் தடுப்பு மருந்து பரிசோதனை தொடங்கியது

2 mins read
747b9908-4915-4cbf-9156-8ce329cfae98
முதற்­கட்ட பரி­சோ­த­னை­யில் மருந்­தால் பாதிப்பு ஏற்­ப­டு­கி­றதா என்­பது மட்­டுமே கண்­ட­றி­யப்­படும். இரண்­டா­வது கட்ட பரி­சோ­த­னை­யில் மருந்­தின் அளவு அதி­க­ரிக்­கப்­பட்டு, கொரோனா கிரு­மியை எதிர்த்­துப் போரா­டு­கி­றதா என்­பது சோதிக்­கப்­ப­டும் என மருத்­த­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். படம்: ஊடகம் -

ரோத்­தக்: ஆந்­திர மாநி­லம் ஹைத­ரா­பாத்தை தலை­மை­ய­க­மா­கக் கொண்டு செயல்­படும் பாரத் பயோ­டெக் நிறு­வ­னம், ஐசி­எம்­ஆர் எனப்­படும் இந்­திய மருத்­துவ ஆய்­வுக் கழ­கம், தேசிய நச்சு உயி­ரி­யி­யல் கழ­கம் ஆகி­ய­வற்­று­டன் இணைந்து கோவாக்­ஸின் என்­னும் கொரோனா தடுப்பு மருந்தை தயா­ரித்து உள்­ளது.

கொரோனா கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து குணப்­ப­டுத்த உள்­நாட்­டி­லேயே தயா­ரிக்­கப்­பட்ட முதல் தடுப்பு மருந்­தான இதனை மனி­தர்­க­ளுக்­குச் செலுத்­திப் பரி­சோ­திக்­கும் முயற்சி இரு கட்­டங்­க­ளா­கத் தொடங்­கப்­பட்­டுள்­ளது.

இரு­வி­தப் பரி­சோ­த­னைக்கு இந்­திய மருத்­துவ ஆராய்ச்­சிக் கழ­க­மும் (ஐசி­எம்­ஆர்) மத்­திய சுகா­தார அமைச்­சும் அனு­மதி வழங்­கி­யுள்­ளன.அம்­ம­ருந்து தற்­போது மனி­தர்­க­ளுக்­குச் செலுத்­தப்­பட்டு பரி­சோ­திக்­கப்­ப­டு­கிறது. ஹரி­யா­னா­வின் ரோத்­தக் நக­ரில் மூன்று தொண்­டூ­ழி­யர்­க­ளின் உட­லில் மருந்து செலுத்­தப்­பட்­டது. நீண்ட நேரம் வரை அவர்­க­ளின் உடல்­ந­ல­னில் எதிர்­மறை மாற்­றம் எது­வும் இன்றி நல­மாக இருந்­த­தாக ரோத்­தக் பிஜி­ஐ­எம்­எஸ் மருத்­து­வ­ம­னை­யின் மருத்­து­வர் குழு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தது.

ஹரி­யானா மாநில சுகா­தா­ர­ அமைச்­சர் அனில் விஜ் இது­கு­றித்து டுவிட்­டர் தக­வல் ஒன்­றைப் பதி­விட்­டுள்­ளார். மூன்று வகை­யான நோயா­ளி­க­ளின் உட­லுக்­குள் செலுத்­தப்­பட்ட மருந்து எந்­த­வி­தப் பிரச்­சி­னை­யை­யும் ஏற்­ப­டுத்­த­வில்லை என்று அதில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார். கோவாக்­ஸின் சோத­னை­யில் வெற்றி பெறும் என்று அனைத்து தரப்­பி­ன­ரும் நம்­பிக்­கை­யு­டன் உள்­ள­னர்.

தொடர்ந்து ஆறு மாதங்­க­ளுக்கு இந்­தப் பரி­சோ­தனை நடத்­தப்­படும். முதல் மூன்று மாதங்­கள் கோவாக்­ஸின் தடுப்பு மருந்­தின் தன்மை குறித்­தும் உட­லில் எவ்­வாறு நோய் எதிர்ப்பு சக்­தியை உரு­வாக்­கும் திறன் குறித்­தும் ஆய்வு செய்­யப்­படும். ஏதா­வது எதிர்­ம­றை­யான விளை­வு­கள் உண்­டாக்­கு­கி­றதா என பரி­சோ­திக்­கப்­படும். இந்­தப் பரி­சோ­த­னைக்கு 30 வயது முதல் 40 வய­துள்­ள­வர்­கள் மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

இந்­நி­லை­யில், இந்­துஸ்­தான் டைம்ஸ் இணை­யச் செய்தி புதிய தக­வல் ஒன்றை வெளி­யிட்டு உள்­ளது. கோவாக்­ஸின் தடுப்பு மருந்து மனி­தர்­க­ளி­டம் செலுத்தி சோதிக்­கும் நட­வ­டிக்கை ஜூலை 15ஆம் தேதி தொடங்­கி­ய­தா­க­வும் 375 பேர் தேர்வு செய்­யப்­பட்டு அவர்­க­ளின் உட­லில் மருந்து செலுத்­தப்­பட்டு சோதிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அச்­செய்தி குறிப்­பிட்­டது. நாடு முழு­வ­தும் வெவ்­வேறு பகு­தி­களில் உள்ள 12 மருத்­து­வ­ம­னை­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு அவற்­றில் மனி­தர்­க­ளுக்கு மருந்து செலுத்தி சோதிக்­கப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்ட அந்த இணை­யச் செய்தி, அந்த 375 பேர் யார் என்­பது ரக­சி­ய­மாக வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறி­யது. பரி­சோ­தனை காலம் முடிந்த பின்­னர்­தான் யார் யார் பரி­சோ­த­னை­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­னர் என்று தெரிய வரும் எனக் கூறப்­ப­டு­கிறது.

மனி­தர்­க­ளுக்கு மருந்து செலுத்தி பரி­சோ­திக்­கத் தேர்ந்ெ­த­டுக்கப்பட்ட மருத்­து­வ­ம­னை­களில் சென்­னை­யி­லுள்ள எஸ்­ஆர்­எம் மருத்­து­வ­ம­னை­யும் அடங்­கும்.

முதற்­கட்ட பரி­சோ­த­னை­யில் மருந்­தால் பாதிப்பு ஏற்­ப­டு­கி­றதா என்­பது மட்­டுமே கண்­ட­றி­யப்­படும். இரண்­டா­வது கட்ட பரி­சோ­த­னை­யில் மருந்­தின் அளவு அதி­க­ரிக்­கப்­பட்டு, கொரோனா கிரு­மியை எதிர்த்­துப் போரா­டு­கி­றதா என்­பது சோதிக்­கப்­ப­டும் என மருத்­த­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.