திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் துபாயில் பதுங்கியுள்ள ஃபைசல் ஃபரீத்திற்கு எதிராக அனைத்துலக போலிஸ் (இண்டர்போல்) 'லுக்அவுட் நோட்டீஸ்' பிறப்பித்து உள்ளது. முன்னதாக அவரது பாஸ்போர்ட்டை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது.
துபாயைவிட்டு வேறு எங்கும் செல்லாதவாறு அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அனைத்துலக போலிசின் தேடுதல் அறிவிப்பு காரணமாக விரைவில் ஃபைசல் கைது செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று நம்பப்படுகிறது.
கேரளாவை உலுக்கி வரும் 30 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் சரித், ஸ்வப்னா சுரேஷ், ஃபைசல் ஃபரீத், சந்திப் நாயர் ஆகியோர் மீது தேசிய புலனாய்வு முகவை (என்ஐஏ) வழக்குப்பதிவு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.

