ராஜ்நாத் சிங்: இந்தியா பலவீனமான நாடல்ல; ஓர் அங்குல நிலத்தைக்கூட யாராலும் தொடமுடியாது

ராஜ்நாத் சிங்: இந்தியா பலவீனமான நாடல்ல; ஓர் அங்குல நிலத்தைக்கூட யாராலும் தொடமுடியாது

2 mins read
41fb5ae1-1ca8-41f6-b074-50b027ea81a0
-

லடாக்: லடாக் யூனி­யன் பிர­தே­சத்­தின் கிழக்கே சீன ராணு­வம் ஊடு­ரு­வி­ய­தன் கார­ண­மாக கல்­வான் பள்­ளத்­தாக்­கில் கடந்த மாதம் இரு நாட்டு ராணு­வ­மும் மோத­லில் ஈடு­பட்­டன. இதில் இந்­தியா தரப்­பில் 20 வீரர்­கள் கொல்­லப்­பட்­ட­னர். இத­னால் எல்­லை­யில் ஏற்­பட்ட பதற்­றத்­தைத் தணிக்க இரு நாடு­களும் தொடர்ந்து பேச்­சு­வார்த்­தை­யில் ஈடு­பட்டு வரு­கின்­றன.

இதில் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­றம் ஏற்­பட்­ட­தால் இம்­மா­தம் 6ஆம் தேதி முதற்­கட்ட படை விலக்­கல் தொடங்­கி­யது. படை­களை முற்­றி­லும் திரும்­பப் பெறு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளன. இந்த நிலை­யில் காஷ்­மீர் மற்­றும் லடாக் யூனி­யன் பிர­தே­சங்­களில் அதி­கா­ர­பூர்வ சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­டி­ருக்­கும் தற்­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங், லடாக்­கில் பங்­கோங்சோ ஏரிக்­க­ரை­யில் அமைந்­துள்ள லுகுங் பகு­தி­யில் ராணு­வம் மற்­றும் இந்தோ-திபெத் பாது­காப்­புப் படை­யி­னர் மத்­தி­யில் உரை­யாற்­றி­னார்.

அப்­போது அவர் கூறுைக­யில், "கிழக்கு லடாக்­கில் மோதலை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தை­கள் நடந்து வரு­கின்­றன. இந்­தப் பிரச்­சி­னைக்கு பேச்­சு­வார்த்தை மூலம் தீர்­வு­காண முடிந்­தால், அதை­விட சிறந்­தது வேறெ­து­வும் இல்லை. ஆனால் இதில் எந்த அள­வுக்கு பிரச்­சினை தீர்க்­கப்­படும் என்­ப­தற்கு என்­னால் உத்­த­ர­வா­தம் அளிக்க முடி­யாது.

"எது நிகழ்ந்­தா­லும் இந்­தி­யா­வின் ஓர் அங்­கு­லம் நிலத்­தைக்­கூட உல­கின் எந்த ஒரு சக்­தி­யா­லும் தொட­மு­டி­யாது என்­பதை உங்­க­ளுக்கு உறு­தி­ய­ளிக்க முடி­யும். இந்­தியா பல­வீ­ன­மான நாடு அல்ல. இங்கு வீரர்­கள் புரிந்த ஒப்­பற்ற தியா­கம் வீணா­வதை நாங்­கள் அனு­ம­திக்­க­மாட்­டோம்.

"எந்­த­வொரு நாட்­டி­லும் இந்­தியா ஊடு­ரு­வவோ நிலத்தை ஆக்­கி­ர­மிக்­கவோ இல்லை. ஆனால் இந்­தி­யா­வின் சுய­ம­ரி­யா­தையை யாரும் காயப்­ப­டுத்த விரும்­பி­னால் அதை பொறுத்­துக்­கொள்­ள­மாட்­டோம். எந்த நிலை­யி­லும் அதற்கு சரி­யான பதி­லடி கொடுக்­கப்­படும்," என்று தெரி­வித்­தார் ராஜ்­நாத்.