லக்னோ: புதுடெல்லியில் இருந்து பீகார் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. நேற்று அதிகாலை ஐந்து மணி அளவில் அந்தப் பேருந்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா - லக்னோ விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் முந்திச்சென்ற கார் மீது மோதியது.
மோதிய வேகத்தில் பேருந்தும் காரும் விரைவுச்சாலைக்கு ஓரமாக இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தன.
இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் கண்ணுஜ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ள உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அனைத்து வசதிகளையும் வழங்க மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

