மின்கட்டண வசூல்: அதிகாரிகளைக் கட்டி வைத்த மக்கள்

ஹைத­ரா­பாத்: கொரோனா ஊர­டங்கு காலத்­தில் மின்­சா­ரக்­கட்­ட­ணத்தை கணக்­கி­டு­வ­தி­லும், கட்­ட­ணத்தை வசூ­லிப்­ப­தி­லும் நாடு முழு­வ­தும் மின்துறை­யில் குழப்­ப­மான சூழல் நிலவி வரு­கிறது.

மேலும், மின் கட்­ட­ணம் மிக­வும் அதி­க­மாக வசூ­லிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் குற்­றச்­சாட்­டு­கள் எழுந்­துள்­ளன. இத­னால் சில சம­யங்­களில் மின்­வா­ரி­யத்­துறை ஊழி­யர்­க­ளுக்­கும், பொது­மக்­க­ளுக்­கும் இடையே கருத்து மோதல்­கள் நிகழ்ந்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், தெலுங்­கானா மாநி­லம் மேடக் மாவட்­டத்தை சேர்ந்த மின்­வா­ரி­யத்­துறை அதி­கா­ரி­கள் இரு­வர் தங்­கள் பணி எல்­லைக்கு உள்­பட்ட அல­துர்­கம் என்ற கிரா­மத்­தில் கணக்­கி­டப்­பட்ட மின் கட்­ட­ணத்தை வசூ­லிக்­கச் சென்­ற­னர்.

அந்த கிராம மக்­க­ளி­டம் மின் கட்­ட­ணத்தை உட­ன­டி­யாக செலுத்­தும்­படி அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். இத­னால் கிராம மக்­களில் சில­ருக்­கும் மின்­வா­ரி­யத்­துறை அதி­கா­ரி­க­ளுக்­கும் இடையே வாக்கு­வா­தம் ஏற்­பட்­டது. வாக்­கு­வா­தம் முற்­றிய நிலை­யில் ஆத்­தி­ர­ம­டைந்த கிராம மக்­கள் மின் கட்­ட­ணம் வசூ­லிக்க வந்த மின் வாரி­யத்­துறை அதி­கா­ரி­கள் இரு­வ­ரை­யும் அங்கு இருந்த மின் கம்­பத்­தில் கட்டி வைத்­த­னர்.

இது­கு­றித்து தக­வ­ல­றிந்த காவல்­து­றை­யி­னர் சம்­பவ இடத்­திற்குச் சென்று அதி­கா­ரி­களை மீட்­டனர். மேலும், இது குறித்து மின்­வா­ரி­யத்­துறை அதி­கா­ரி­கள் கொடுத்த புகா­ரை அ­டுத்து அந்தக் கிரா­மத்­தைச் சேர்ந்த 5 பேர் மீது போலிசார் வழக்­குப்­ப­திவு செய்து அவர்­களை கைது செய்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!