திருவனந்தபுரம்: கேரளாவில் ஐக்கிய அரபு சிற்றரசின் தூதரகத்தின் பெயரில் சுமார் 180 கிலோ தங்கம் கடத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுவப்னா, சந்தீப் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடக்கும் நிலையில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் பாசில் பரீத் என்பவர் ஐக்கிய அரபு சிற்றரசுக்கு தப்பிவிட்டதாகத் தெரிகிறது.
கடத்தலில் ஈடுபட்டவர்கள் தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இருபது முறைக்கும் மேல் தங்கம் கடத்தி வந்துள்ளனர்.
இதையடுத்து கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தேசிய புலனாய்வு முகவை அதிகாரிகள் தொடங்கியுள்ளதாக இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.