தங்க கடத்தல் பணம் மூலம் திரைப்படங்கள் தயாரிப்பு; தமிழகத்திலும் விசாரணை

கேரள அரசியலில் புயலைக் கிளப்பி இருக்கும் தங்கக் கடத்தல் விவகாரத்தில் தினமும் புதுப்புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு சிறறரசு தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கின. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிரமாக விசாரித்து வருகிறது.

கடத்தல் தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவன அதிகாரியாக வேலை செய்தவர்.

ஸ்வப்னாவுக்கும் இவரோடு பெங்களூரில் கைது செய்யப்பட்ட சந்தீப் நாயருக்கும் வழங்கப்பட்ட என்ஐஏ காவல் இன்று காலை முடிவடைந்த நிலையில் மேலும் மூன்று நாட்களுக்குக் காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதற்கிடையே, ஸ்வப்னா சுரேஷ் தலைமையிலான அணி 14 முறை தங்கக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக சுங்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தீப் நாயர் போலிஸ் வாகனங்களைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட தங்கத்தை கேரளா முழுவதும் விநியோகித்தார் எனக் கண்டுபிடித்துள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பள்ளிப்படிப்பில் 10ஆவது கூட தேர்ச்சி பெறாக ஸ்வப்னா சுரேஷுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெறக்கூடிய வேலை கொடுக்கப்பட்டது எப்படி? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவரது சான்றிதழ்கள் போலி என மகாராஷ்டிராவின் பாபா சாகிப் அம்பேத்கர் பல்கலைக்கழகம் தெரிவித்துவிட்டது.

மேலும் முதல்வர் அலுவலகத்தில் வேலை செய்த சிவசங்கரின் செயல்பாடுகள் முதலமைச்சரான பினராயி விஜயனுக்கு எப்படித் தெரியாமல் போயின என்று கேள்வி எழுப்பும் என்ஐஏ அதிகாரிகள் பினராயி விஜயனை விசாரணைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, இந்தத் தங்கக் கடத்தலில் தமிழகம் தொடர்புடைய விவகாரமும் வெளியே வந்துள்ளது. ஐக்கிய அரபு சிற்றரசுகள், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து தமிழகத்தில் தங்க நகைக் கடைகள் வைத்துள்ள கேரள நிறுவனங்களுக்கு ஸ்வப்னாவின் கூட்டாளியான ஜலால், தங்கம் விநியோகம் செய்திருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

2015ஆம் ஆண்டு கொச்சி விமான நிலையத்தில் குடிநுழைவு அதிகாரிகள் துணையுடன் தங்கத்தை கடத்திய வழக்கில் ஜலால் குற்றவாளி என ஏற்கெனவே சுங்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தங்கம் கடத்துவதற்கு என அவர் தமது காரின் பின் இருக்கையில் ஒரு ரகசிய அறையை வைத்திருந்தார் எனக் கூறிய அதிகாரிகள் அந்த காரை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் ஜலால் தமிழ்த் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு நிதியுதவி செய்திருக்கிறார் என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதேபோல ஸ்வப்னா நான்கு மலையாளப் படங்களைத் தயாரிக்க கடத்தல் பணத்தைக் கடனாக அளித்த தகவலும் வெளியாகியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!