பிளாஸ்மா தானம் செய்வதாக 200 பேரிடம் மோசடி, கைது

பிளாஸ்மா தானம் செய்வதாக 200 பேரிடம் மோசடி, கைது

1 mins read
ff619715-73f3-46c7-9d39-3e479dbf4f8c
கைது செய்யப் பட்ட சந்தீப் ரெட்டி, 25. படம்: இந்திய ஊடகம் -

ஹைத­ரா­பாத்: நாடு முழு­வ­தும் கொரோனா பாதிப்­பு­கள் அதி­க­ரித்­துள்ள நிலை­யில் கொரோனா சிகிச்­சைக்கு பிளாஸ்மா தானம் நல்ல பல­ன­ளிப்­ப­தாக பலர் கூறி வரு­கின்­ற­னர்.

மத்­திய, மாநில அர­சு­களும் கொரோ­னா­வி­லி­ருந்து மீண்­ட­வர்­களை பிளாஸ்மா தானம் செய்ய வலி­யு­றுத்தி வரு­கின்­றன. இந்­நி­லை­யில் இதை வைத்து சிலர் மோசடி சம்­ப­வங்­க­ளி­லும் ஈடு­பட்­டி­ருப்­ப­தாக தெரி­கிறது.

தெலுங்­கானா மாநி­லம் ஐத­ரா­பாத்தை சேர்ந்த சந்­தீப் ரெட்டி, 25, என்­ப­வர் கொரோனா கிருமித்தொற்றில் இருந்து தாம் மீண்டுள்ளதாகவும் கொரோனா பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு பிளாஸ்மா தானம் செய்­ய விரும்புவதாகவும் சமூக வலைத் ­த­ளங்­களில் பதி­விட்­டுள்­ளார்.

அதை நம்பி கொரோனா பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் மற்­றும் அவ­ரது குடும்­பங்­கள் இளை­ஞரை அணுக போக்குவரத்துச் செலவுக்குப் பணம் வேண்டும் என்று அவர் கேட்­டுள்­ளார்.

அவ்­வாறு கூறியே தம்மை தொடர்­பு­கொண்ட அத்­தனை பேரி­ட­மும் சில ஆயி­ரங்­களை இணை­யம் வழி­யா­கப் பெற்­றுள்­ளார் அவர். பின்­னர் தமது கைபே­சியை அடைத்­து­விட்டு தலை­ம­றை­வாகி விட்­டார்.

பணம் அனுப்­பிய பல­ரும் சந்­தீப்பை தொடர்­பு­கொள்ள இய­லா­மல் தவித்த னர். பாதிக்­கப்­பட்ட ஒரு­வர் அளித்த புகா­ரின் பேரில் போலி­சார் நட­வ­டிக்­கை­யில் இறங்­கி­னர். தீவி­ர­மாக தேடப்­பட்ட பின்­னர் சந்­தீப் ரெட்டியை அவர்­கள் கைது செய்­த­னர்.

கிட்­ட­த்தட்ட 200 பேரி­டம் அவர் இவ்­வாறு பணம் பெற்­றது விசா­ர­ணை­யில் தெரிய வந்­தது.

இது­போன்று யாரா­வது பிளாஸ்மா தானம் செய்­வ­தாக பணம் கேட்­டால் உட­ன­டி­யாக பணம் அனுப்­பி­விட வேண்­டாம் என்­றும் விளம்­ப­ரம் செய்­ப­வர்­கள் பற்றி புகார் செய்­யு­மா­றும் தெலுங்­கானா போலி­சார் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.