மத்திய பிரதேசம் - 10, 69 கேரட் வைரம் கண்டெடுப்பு

1 mins read
9aa9fbc6-fb00-4866-a5bd-ce5e9ff0f9ea
-

மத்திய பிரதேசத்தின் பண்ணா மாவட்டத்திலுள்ள வைரச் சுரங்கத்தில் 10.69 கேரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வைரத்தின் மதிப்பு ஏறக்குறைய 50 லட்சம் என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

ராணிபூர் வட்டாரத்தில் வைரச்சுரங்கத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ள 35 வயது ஆனந்திலால் குஷ்வா, அந்த வைரத்தை உள்ளூர் வர்த்தக அலுவலகங்கத்திற்கு ஒப்படைத்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

இந்த வைரக்கல் ஏலத்திற்கு விடப்பட்டும். இதன் மூலம் வரும் பணத்திலிருந்து ராயல்ட்டி, வரித்தொகைகள் கழிக்கப்பட்ட பிறகு அந்தப் பணம் திரு குஷ்வாஹாவுக்குத் தரப்படும்.