கொரோனா மையத்தில் 14 வயதுச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

1 mins read
c364e6d4-0577-459f-ab64-3d2d9a307c1c
கொவிட்-19 பராமரிப்பு நிலையமாக மாற்றப்பட்டுள்ள புதுடெல்லி வில்லேஜ் விளையாட்டரங்கம். கோப்புப்படம்: இபிஏ -

புது­டெல்லி: கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்ட 14 வயது சிறு­மியை சக நோயாளி ஒரு­வர் பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­துள்ள சம்­ப­வம் பெரும் அதிர்ச்சி அலை­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

டெல்­லி­யைச் சேர்ந்த அந்­தச் சிறுமி அங்­குள்ள கொரோனா சிகிச்சை மையத்­தில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தார். உல­கி­லேயே மிகப்­பெ­ரிய கொரோனா கிருமி தடுப்பு மையம் என்று பெய­ரெ­டுத்­துள்ள அந்த மையத்­தில் சுமார் 10 ஆயி­ரம் படுக்­கை­கள் உள்­ளன.

இங்கு கொவிட்-19 நோயால் பாதிக்­கப்­பட்­டுள்ள 19 வயது இளை­ஞ­ரும் அவ­ரது நண்­ப­ரும் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் கடந்த 15ஆம் தேதி அச்­சி­று­மியை அம்­மை­யத்­தின் கழி­வ­றை­யில் வைத்து அந்த இளை­யர் பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­தார் என்­றும் அதை அவ­ரது நண்­பர் காணொ­ளி­யா­கப் படம் பிடித்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து சிறு­மி­யின் குடும்­பத்­தார் அளித்த புகா­ரின் பேரில் இளை­யர்­கள் இரு­வ­ரும் கைதா­கி­னர். எனி­னும் கிரு­மித் தொற்­றி­லி­ருந்து குண­ம­டை­யும் வரை அவர்­கள் நீதி­மன்­றக் காவ­லின் கீழ் இதே மையத்­தில் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள் என காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வின் ஆகப்­பெ­ரிய தனி­மைப்­ப­டுத்­தும் மையத்­தில் 14 வயது சிறுமி சீர­ழிக்­கப்­பட்­டது புது விவா­தங்­களை எழுப்பி உள்­ளது.

இதே­போல் மும்­பை­யி­லும் கொரோனா தடுப்பு மையத்­தில் தங்­கி­யி­ருந்த 40 வயது பெண் மீது 25 வயது இளை­யர் ஒரு­வர் பாலி­யல் தாக்­கு­தல் நடத்­தி­ய­தாக அண்­மை­யில் ஒரு வழக்கு பதி­வா­னது. மேலும் பீகா­ரில் கொரோனா மையத்­தில் ஒரு சிறு­மி­யைப் பாலி­யல் வன்கொடுமை செய்த ஒரு­வர் கைதா­கி­யுள்­ளார்.