30 விநாடிகளில் தொற்றை கண்டறியும் கருவி

30 விநாடிகளில் தொற்றை கண்டறியும் கருவி

1 mins read
c56e6f97-384f-471b-9d7a-c73c89aaadc9
புதுடெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொவிட்-19 சோதனைக்காக மாதிரி எடுக்கும் மருத்துவ ஊழியர். படம்: ஏஎப்பி -

புது­டெல்லி: முப்­பதே விநா­டி­களில் கொரோனா கிரு­மித் தொற்­றைக் கண்­ட­றி­வ­தற்­கான புதுக் கரு­வியை இந்­தி­யா­வும் இஸ்­ரே­லும் இணைந்து உரு­வாக்க உள்­ளன.

உல­கம் முழு­வ­தும் வேக­மா­கப் பரவி வரு­கிறது கொரோனா கிரு­மித் தொற்று. இத்­தொற்­றைக் கண்டு­பிடிக்க பல பரி­சோ­தனை முறை­கள் பின்­பற்­றப்­ப­டு­கின்­றன.

இந்­தி­யா­வைப் பொறுத்­த­வரை 'ஆர்.டி.பி.சிஆர்.' முறை பின்­பற்­றப்­ப­டு­கிறது. எனி­னும் பரி­சோ­தனை முடி­வு­களை அறிய சில மணி நேரம் காத்­தி­ருக்க வேண்­டும்.

இந்­நி­லை­யில் முப்­பதே விநா­டி­களில் கிரு­மித்­தொற்று உள்­ளதா என்­பதை உறுதி செய்­வ­தற்­கான கரு­வியை இந்­தி­யா­வும் இஸ்­ரே­லும் இணைந்து உரு­வாக்க உள்­ளன. இது­தொ­டர்­பாக இந்­திய ராணுவ ஆராய்ச்சி மற்­றும் மேம்­பாட்டு அமைப்பு இஸ்­ரேல் விஞ்­ஞா­னி­கள் குழு­வு­டன் இணைந்து செயல்­பட உள்­ளது.

"இஸ்­ரேல் தொழில்­நுட்­பத்தை இந்­தி­யா­வின் வளர்ச்சி மற்­றும் உற்­பத்­தித் திற­னு­டன் இணைத்து இயல்பு வாழ்க்­கையை மீண்­டும் தொடங்­கு­வதே இத்­திட்­டத்­தின் நோக்­கம்," என அந்­நாடு தெரி­வித்­துள்­ளது.

கொரோனா விவ­கா­ரம் தலை­தூக்­கி­யது முதல் இஸ்­ரேல் பிர­த­மர் பெஞ்­ச­மின் நேட்டன்யாகுவும் பிர­த­மர் மோடி­யும் தொலை­பேசி வழி மூன்று முறை ஆலோ­சனை நடத்தி உள்­ள­னர்.

இந்­நி­லை­யில் கொரோ­னா­வுக்கு எதி­ரான போராட்­டத்­தில் இரு நாடு­களும் இணைந்து செயல்­பட உள்­ளன.

அண்­மைய சில ஆண்­டு­க­ளா­கவே இந்­தி­யா­வும் இஸ்­ரே­லும் அதிக நெருக்­கம் பாராட்டி வரு­கின்­றன. இஸ்­ரே­லு­டன் பல்­வேறு துறை­களில் இணைந்து செயல்­படு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை இந்­தியா மேற்­கொண்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.