எய்ம்ஸ் இயக்குநர்: ஊரடங்கால் மட்டுமே கிருமிப்பரவலைத் தடுக்க இயலாது

எய்ம்ஸ் இயக்குநர்: ஊரடங்கால் மட்டுமே கிருமிப்பரவலைத் தடுக்க இயலாது

1 mins read
ee73fd45-4618-4c3a-8e4d-0d82b41283da
மும்பையில் உள்ள ஒரு கட்டுமானத்தளத்தில் பொறியாளர் ஒருவர், குழாய்க்குள் அமர்ந்தவாறு குறிப்பு எழுதுகிறார். படம்: ஏஎப்பி -

புது­டெல்லி: ஊர­டங்கு மட்­டுமே கொரோனா கிரு­மித் தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தி­விட முடி­யாது என தேசிய நோய்த்­த­டுப்பு அமைப்­பின் உறுப்­பி­ன­ரும் எய்ம்ஸ் இயக்­கு­ந­ரு­மான ரஞ்­சித் குலே­ரியா தெரி­வித்­துள்­ளார்.

வீடு வீடா­கச் சென்று கொரோனா பரி­சோ­தனை மேற்­கொண்டு பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்தி சிகிச்­சை­ய­ளிப்­பதே சிறந்த நட­வ­டிக்­கை­யாக இருக்­கும் என்று பேட்டி ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இந்­தி­யா­வைப் பொறுத்­த­வரை பல்­வேறு நக­ரங்­களில், வெவ்­வேறு கால­கட்­டங்­களில் கிரு­மித்­தொற்­றுப் பர­வல் உச்­சத்தை அடை­யும். தற்­போது டெல்லி, மும்பை, அக­ம­தா­பாத் மற்­றும் தென்­மா­நி­லங்­க­ளின் சில நக­ரங்­களில் கொரோனா கிருமி வளை­கோடு சரி­யத் துவங்­கி­யுள்­ளது," என்று ரன்­தீப் கூறி­யுள்­ளார்.

கொரோனா வளை­கோடு சரி­கிறது என்­ப­தற்­காக தற்­போது மேற்­கொண்­டு­வ­ரும் பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளைக் குறைத்­து­வி­டக்­கூ­டாது என அவர் அறி­வு­றுத்தி உள்­ளார்.

மேலும் நோய்ப்­ப­ர­வல் குறைந்­த­வு­டன் தங்­க­ளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதி­க­ரித்­து­விட்­ட­தா­கக் கருதி பொது­மக்­கள் முகக்­க­வ­சம் அணி­யா­மல், சமூக வில­க­லைப் பின்­பற்­றா­மல் இருந்­தால் அடுத்த அலை ஏற்­பட்­டு­வி­டும் என்­றும் ரன்­தீப் எச்­ச­ரித்­துள்­ளார்.

மழைக்காலம், குளிர்காலம் வந்துவிட்டால் சளிக் காய்ச்சல் பரவும் என்பது கவலைக்குரிய விஷயம் என்று குறிப்பிட்டுள்ள அவர், கொவிட்-19 நோயை ஏற்படுத்தும் கொரோனா கிருமி இதுவரை மனிதர்கள் அறியாத ஒன்று என்பதால் அது எவ்வாறு செயல்படும் என்பது தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.