தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

2 mins read
aad0784c-2407-4591-81a2-a2abc5eb721d
மும்பையில் சவேரி பசார் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடை. கோப்புப்படம்: புளூம்பெர்க் -

புது­டெல்லி: அனைத்­து­லக அள­வில் தங்­கம் விலை நேற்று புதிய உச்­சத்­தைத் தொட்­டது. தொழில்­துறை தேக்­கத்­தைத் தொடர்ந்து உல­கம் முழு­வ­துமே முத­லீட்­டா­ளர்­கள் பாது­காப்­பான முத­லீ­டு­க­ளின் பக்­கம் திரும்­பி­னர்.

பங்­குச்­சந்தை, ரியல் எஸ்­டேட், அமெ­ரிக்க டாலர்­கள் என பல­வற்­றில் இருந்த முத­லீ­டு­க­ளை­யும் மாற்றி தங்­கத்­தில் முத­லீடு செய்­த­னர். பாது­காப்பு கருதி தங்­கத்­தில் முத­லீடு செய்­வ­தால் தங்­கத்­தின் தேவை அதி­க­ரித்து அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வரு­கிறது. கொரோனா கிரு­மிப் பாதிப்­பால் தொழில்­துறை தேக்­கம் குறித்த பீதி நிலவி வரும் நிலை­யில் தங்­கம் விலை பெரிய அள­வி­லான உயர்­வை­யும் சிறிய இறக்­கத்­தை­யும் சந்­தித்து வரு­கிறது.

இந்­தி­யா­வில் ஆப­ர­ணத் தங்­கத்­தின் விலை நேற்று கிரா­முக்கு ரூ.74 உயர்ந்து ரூ.4,978 ஆக விற்­பனை செய்­யப்­பட்­டது. சவ­ர­னுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.39,824 என்று விற்­ப­னை­யா­னது.

இதே­போல் 24 காரட் தங்­கத்­தின் விலை 8 கிராம் 41,816 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. வெள்­ளி­யின் விலை கிரா­முக்கு 3.90 ரூபாய் உயர்ந்து 70.80 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கிறது.

தமிழகத்தில் வரலாற்றில் இது வரை இல்லாத அளவுக்கு ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் 40,000 ரூபாயைக் கடந்து உள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.872 உயர்ந்து ரூ.40,104க்கு விற்பனையாகிறது.

தங்­கம் விலை கடந்த சில மாதங்­க­ளா­கவே உச்­சத்­தில் இருந்து வரும் நிலை­யில் தற்­போது ஆடி மாதம் என்­ப­தால் விலை குறை­யும் என இந்­தி­யர்­கள் தரப்­பில் எதிர்­பார்ப்பு இருந்­தது. ஆனால் அதற்கு மாறாக விலை உயர்ந்து வரு­வது நடுத்­தர மக்­களை கடும் அதிர்ச்­சிக்கு உள்­ளாக்கி உள்­ளது.

சிங்கப்பூரில் நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் 82 வெள்ளிக்கு உயர்ந்தது.