ஏர் இந்தியா நிறுவனத்தின் 100% பங்குகளையும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாங்க அனுமதி

கடனில் தத்தளிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 100% பங்குகளையும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தற்போது 60,000 கோடிக்கும் மேல் கடனில் தத்தளித்து வருகிறது.

நஷ்டத்திலிருந்து ஏர் இந்தியாவை மீட்க மத்திய அரசு 30,000 கோடி ரூபாய் வரை நிதியுதவி செய்தும் அது பலன் தரவில்லை என்று கூறப்படுகிறது.

ஏர் இந்தியாவின் பங்குகளை தனியாருக்கு விற்கும் அரசின் முதல் முயற்சி தோல்வியடைந்தது.

ஏர் இந்தியா நிறுவனத்தில் அந்நிய நேரடி முதலீடு குறித்த கொள்கையில், செய்யப்பட்டு இருக்கும் மாற்றத்தை மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி, வெளிநாட்டு விமான நிறுவனங்களை உள்ளடக்கிய வெளிநாட்டு முதலீடுகள் ஏர் இந்தியாவில் 49 விழுக்காட்டுக்கு மிகாமல் இருக்கும்.

ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 100% வரை பங்குகளை வாங்குவதற்கு ரிசர்வ் வங்கி, மத்திய அரசு ஆகியவற்றின் முன் அனுமதியின்றி முதலீட்டை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும்.

ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏலத்திற்கான காலக்கெடு கொரோனா காரணமாக ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!