இந்தியாவில் 12 நாளில் 500,000 பேருக்கு தொற்று

இந்தியாவில் 12 நாளில் 500,000 பேருக்கு தொற்று

1 mins read
d0c97cc3-af55-43db-9e63-8b42ef3e1e25
தொண்டூழிய அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மும்பை, தாராவி பகுதியில் குடியிருப்போரின் உடல் வெப்ப நிலையைச் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். படம்: ராய்ட்டர்ஸ் -

இந்­தி­யா­வில் கொவிட்-19 கிருமி அசுர வேகத்­தில் பரவி வரு­கிறது. அங்கு பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை செவ்­வாய்க்­கி­ழமை 1.5 மில்­லி­ய­னைத் தாண்­டி­விட்­டது. அன்று ஒரு நாளில் மட்­டும் 49,292 பேருக்கு உறுதி செய்­யப்­பட்ட நிலை­யில் 781 பேர் உயி­ரி­ழந்­த­னர். 12 நாட்­களில் 500,000 பேருக்­குத் தொற்று ஏற்­பட்­டுள்­ளது. கிரு­மிப் பர­வல் தொடங்­கியபோது 148 நாட்­க­ளுக்­குப் பின்­னரே முதல் 500,000 நோயா­ளி­கள் பதி­வா­யி­னர். கிரு­மிப் பர­வல் வேகத்­துக்கு ஈடு கொடுக்­கும் அள­வில் மருத்­து­வர்­களும் தாதி­யர்­களும் இல்லை என்று ஒரு தக­வல் தெரி­விக்­கிறது.

உதா­ர­ண­மாக பெங்­க­ளூரு நக­ரில் ஜூன் 30ஆம் தேதி 3,916 ஆக இருந்த நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை ஜூலை 27ஆம் தேதி சுமார் எட்டு மடங்கு அதி­க­ரித்து 33,816 ஆனது.

ஆனால் இத்­தனை பேருக்­கு சிகிச்சை அளிக்க முடி­யாத அள­வுக்கு மருத்­துவப் பணி­யா­ளர்­க­ளுக்கு அங்கு பற்­றாக்­குறை நில­வு­கிறது.