பாதிப்பு குறைந்தாலும் அதிக உயிரிழப்பால் அச்சம்

பாதிப்பு குறைந்தாலும் அதிக உயிரிழப்பால் அச்சம்

2 mins read
2b782e89-9bc1-4879-ae76-9b2ed12a1073
-

திருச்சி: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்கப்­படு பவர்­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து குறை­ந்து வருவ­தாக சுகா­தா­ரத் துறை செயலாளர் ராதா­கி­ருஷ்­ணன் கூறி­யுள்­ளார்.

இருப்­பி­னும், திங்­கள்­கி­ழமை ஒரே நாளில் 109 பேர் உயி­ரி­ழந்து இருப்­பது பொது­மக்­கள் மத்­தி­யில் அச்­சத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

காய்ச்­சல் முகாம்­களை நடத்தி கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட வர்­க­ளைக் கண்­ட­றிந்து வரு­வ­தா­கக் கூறிய ராதா­கி­ருஷ்­ணன், திருச்சியில் கொரோனா மருத்­துவமனை­களில் 1,302 படுக்கை வசதிகள் உள்­ள­தா­க­வும் கூறி­னார்.

இந்­நி­லை­யில், தமி­ழக சுகா தாரத்­துறை வெளி­யிட்­டுள்ள அறிக் கையில், "மாநி­லத்­தில் திங்­கள் கிழமை ஒரே­நா­ளில் புதி­தாக 5,609 பேருக்கு தொற்று உறு­தி­யா­னது.

"மொத்த பாதிப்பு 263,222 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 109 பேர் உயி­ரி­ழந்த நிலையில், மொத்த உயி­ரி­ழப்பு எண்ணிக்கை 4,241 ஆக உயர்ந்துள்­ளது. இது­வரை 202,283 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர்," என்று தெரிவித்­துள்­ளது.

இதற்­கி­டையே, அமைச்­சர்­கள் எஸ்.பி.வேலு­மணி, டி.ஜெயக்­கு­மார், டாக்­டர் சி.விஜ­ய­பாஸ்­கர் ஆகி­யோர் கூட்­டாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு கையில், "சென்னை மாந­க­ராட்­சிக்கு உட்­பட்ட பகு­தி­களில் அதி­காரிகளின் கூட்டு முயற்சி கார­ண­மாக பாதிப்பு குறைந்­துள்­ளது. பாதிப்பு குறைந்து வரு­கிறது என்­பதே சென்னை மக்­க­ளுக்கு மகிழ்ச்­சி­யான செய்­தி­தான். இந்தியாவி­லேயே அதி­களவில் 7½ லட்­சம் பேருக்கு கொரோனா பரி­சோ­தனை செய்­யப்­பட்­டுள்­ளது சென்­னை­யில்­தான். அனைத்து துறை­யி­ன­ரும் இணைந்து செயல்­பட்­ட­தால்­தான் இங்கு நோய்ப்­ப­ர­வல் கட்­டுக்­குள் வந்துள்­ளது," என்­ற­னர்.

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர், கொரோனா வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் குறித்தும் நேரில் கேட்டறிந்தார். படம்: தமிழக ஊடகம்