நீலகிரியை புரட்டிப் போடும் தொடர் மழை

நீலகிரியை புரட்டிப் போடும் தொடர் மழை

1 mins read
4df00ef9-7984-48fc-b7d5-612b5055b2c0
வீடுகளைச் சூழ்ந்துள்ள வெள்ளம். படம்: ஊடகம் -

நீல­கிரி: நீல­கிரி மாவட்­டத்­தில் சில தினங்­க­ளாக கன­மழை நீடித்து வரு­கிறது. இத­னால் பழங்­கு­டி­யி­னர் கிரா­மங்­களை வெள்­ளம் சூழ்ந்­துள்­ள­தால் இயல்பு வாழ்க்கை முடங்­கி­யுள்­ளது.

அப்­ப­குதி மக்­கள் பள்­ளி­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­னர். இம்­மாதம் முதல் தேதி­யில் இருந்து நீடிக்­கும் தொடர் மழை­யா­லும் பலத்த காற்று வீசு­வ­தா­லும் மின்­சா­ர­மும் தொலைத்தொடர்­பும் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளன.

அப்­ப­கு­தி­யில் உள்ள அப்­பர் பவானி, அவ­லாஞ்சி, எம­ரால்டு, குந்தா, பைகாரா உட்­பட பெரும் பாலான அணை­களில் ஐந்து அடி வரை நீர்­மட்­டம் உயர்ந்­துள்­ளது. இத­னால் மக்­கள் மகிழ்ச்­சி­யில் உள்­ள­னர்.

இதற்­கி­டையே, தென்­மேற்கு பரு­வக் காற்று கார­ண­மாக கோவை, நீல­கிரி மாவட்­டங்­க­ளின் மலைப்பகு­தி­களில் கன­மழை முதல் மிக கன­மழை பெய்­யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.