நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சில தினங்களாக கனமழை நீடித்து வருகிறது. இதனால் பழங்குடியினர் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
அப்பகுதி மக்கள் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இம்மாதம் முதல் தேதியில் இருந்து நீடிக்கும் தொடர் மழையாலும் பலத்த காற்று வீசுவதாலும் மின்சாரமும் தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளன.
அப்பகுதியில் உள்ள அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, பைகாரா உட்பட பெரும் பாலான அணைகளில் ஐந்து அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதற்கிடையே, தென்மேற்கு பருவக் காற்று காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.