அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையும் அடிக்கல் நாட்டு விழாவும் நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றன.
ராமர் கோவிலின் கருவறை அமைய உள்ள இடத்தில் 40 கிலோ வெள்ளியிலான செங்கற்களை வைத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இது கொரோனா கிருமித் தொற்று பரவும் கொடிய நேரமாக உள்ளதால், இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட 175 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.
இந்தச் சடங்கில் கலந்து கொள் வதற்காக அயோத்தி வந்து சேர்ந்த பிரதமர் மோடி, முதலாவதாக அங்குள்ள புகழ்பெற்ற 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அனுமன் கோவிலுக்குச் சென்றார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் மோடியுடன் வழிபாடு நடத்தினர்.
அங்குள்ள அனுமன் சிலைக்கு தானே தன் கையால் தீபம் ஏற்றி வழிபட்டார் மோடி.
அதன்பின்னர் அங்கிருந்து ராமர் பிறந்த இடத்தில் நடந்த பூமி பூஜைக்கு பிரதமர் மோடியும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் வருகை அளித்தனர்.
அதன்பின்னர் ராமர் கோயி லுக்கு சாத்திர சம்பிரதாயங்களின் படி அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி விழாவில் பேசியபோது, “நாடு முழுவதும் இருந்து வருகை தந்துள்ள ஆன்மிகத் தலைவர்களுக்கு எனது வணக்கம்.
“ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்துகொண்டதை எனது பாக்கியமாகக் கருதுகிறேன். ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவோம் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
“இப்படி ஒரு நன்னாள் வந்ததை பலராலும் தற்போது வரை நம்ப முடியவில்லை. சரயு நதிக்கரையோரம் பொன்னான வரலாறு பொறிக்கப்பட்டு உள்ளது. வாழ்க்கையில் மிகவும் வியப்புக்குரிய விஷயங்கள் நிறைவேறி உள்ளன.
“நீதித்துறையின் மாண்புக்கு சான்றாக ராமர் கோயில் விளங்குகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது வரலாறு.
“ஸ்ரீராம் பெயரைப் போலவே அயோத்தியில் கட்டப்படவுள்ள இந்தப் பிரம்மாண்டமான ராமர் கோயில் இந்திய கலாசாரத்தின் வளமான பாரம்பரியத்தை பிரதிபலிக்கும். இது முழு மனிதகுலத்தையும் உலகம் உள்ள வரை காக்கும்,” என்று கூறினார்.
இடது: ராமர் கோயி லின் மாதிரித் தோற் றம். அடிக்கல் நாட்டு விழாவில் பயன்படுத் தப்பட்ட 40 கிலோ வெள்ளிக் கற்கள்.
படங்கள்: ஊடகம்