புதுடெல்லி: ஒட்டுமொத்த காஷ்மீர், குஜராத், பஞ்சாப்பின் சில பகுதி களையும் தங்கள் நாட்டுடன் இணைத்து பாகிஸ்தான் வெளி யிட்டுள்ள புதிய வரைபடத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரி வித்துள்ளது.
புதிய வரைபடத்துக்கு தனது அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருப்பதாகவும் இது பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை பிரதிபலிப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
இந்நிலையில், வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பாகிஸ்தானை சாடியுள்ளது.
"பாகிஸ்தானின் அரசியல் வரை படம் என்ற பெயரில் அபத்தமான வரைபடம் வெளியானதைப் பார்த்தோம். இந்தியாவின் எல்லைப்பகுதிகளைப் பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடுவதை ஒருபோதும் ஏற்கமுடியாது. இந்த அபத்தமான கூற்றுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலோ, நம்பகத்தன்மை யுடனோ இல்லை," என்று குறிப்பிட்டு உள்ளது.

