ரூ. 53.68 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

ரூ. 53.68 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

1 mins read
634328e0-3e7d-4c76-abf3-0f82c16c570a
திருவனந்தபுரம் அனைத்துலக விமான நிலையம். படம்: ஊடகம் -

திருவனந்தபுரம்: துபாயில் இருந்து நேற்று முன்தினம் கேரளா வந்த இரண்டு பயணி களிடமிருந்து ரூ. 53.68 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கண்ணூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்த இரண்டு பயணிகள் மொத்தம் ரூ. 53,68,320 மதிப்புள்ள 932 கிராம் தங்கம் வைத்து இருந்ததை சுங்கத்துறை அதி காரிகள் கண்டுபிடித்தனர்.

"தங்கத்தின் மேல் பாதரசம் பூசப்பட்டு சிறிய பைகளில் அவர்கள் மறைத்து வைத்து இருந்தனர். இவர்களை கைது செய்து விசாரித்து வரு கிறோம்," என்று சுங்கத்துறை அதிகாரிகள் கூறினர்.