புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமிப் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்றுக் காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 2.08 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். 1.427 மில்லியன் பேர் குணமடைந்தனர்.
ஒரே நாளில் 933 பேர் பலியானதை அடுத்து மரண எண்ணிக்கை 42,518 ஆகக் கூடியது.
இதனிடையே இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவும் வெள்ளிக்கிழமை தொலைபேசியில் பேசினர்.
இந்திய-பசிபிக் பகுதியில் கொவிட்-19 கிருமியைக் கட்டுப்படுத்துவதில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து இருவரும் பேசினர்.
இவ்வேளையில், எல்லை கடந்து செல்லும் மளிகை, காய்கறி வியா பாரிகளைப் பரிசோதித்து கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

