புதுடெல்லி: லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே நடந்த கடும் மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 35 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவித்தன.
இதன் தொடர்பில் பல முறை இரு தரப்பு பேச்சு நடந்துள்ளது.
இந்நிலையில், லடாக்கில் எல்லைகளைப் பிரிக்கும் உண்மை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இருந்து சீனப் படைகளை மீட்பது பற்றி தவுலத் பெக் ஓல்டி பகுதியில் இந்தியா மற்றும் சீனா இடையே மேஜர் ஜெனரல் அளவிலான பேச்சு வார்த்தை விரைவில் நடக்கும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

