திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதியாகி உள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் இப்பாதிப்பு ஏற்பட்டதாக தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.
இவர்களில் 402 பேர் குணமடைந்துள்ள நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 338 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.