தங்கம் கடத்தல்: துபாயில் முகாமிட்டுள்ள அதிகாரிகள்

திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்துள்ள தங்கம் கடத்தல் தொடர்பாக விசாரிக்க தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் குழு ஒன்று துபாய் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என இந்திய ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா, சந்தீப் நாயர் ஆகிய இருவரும் கைதாகியுள்ளனர். ஃபாசில் ஃபரீத் என்பவர் மீது வழக்குப் பதிவாகி உள்ள நிலையில் அவர் துபாயில் இருப்பது தெரியவந்துள்ளது.

தங்கக் கடத்தலில் கேரளாவின் உயரதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டாலும் அதற்குரிய ஆதாரங்கள் இன்னும் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஃபாசில் ஃபரீத் உள்ளிட்ட மூன்று பேரை விசாரித்தால் பல உண்மைகளும் ஆதாரங்களும் வெளிவரும் என அதிகாரிகள் நம்புவதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கக் கடத்தில் தொடர்புடைய அனைவரை பற்றியும் ஃபாசில் ஃபரீத்துக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என புலனாய்வு அதிகாரிகள் நம்புகின்றனர். அவர்களிடம் பெறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் கேரளாவில் பலர் சிக்குவார்கள் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் புலனாய்வு அதிகாரிகள் துபாயில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலர் கைதாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஏற்கெனவே இந்த வழக்கில் 12 பேர் கைதாகி உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!