கலவரத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் இழப்பீடாக பணம் வசூலிக்க கர்நாடக அரசு முடிவு

பெங்­க­ளூரு: அண்­மை­யில் பெங்­க­ளூ­ரு­வில் நிகழ்ந்த வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் குறித்து நீதி விசா­ரணை நடத்த கர்­நா­டக அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

மேலும், கல­வ­ரத்­தின்­போது பொதுச் சொத்­து­க­ளுக்கு சேதம் விளைவித்த வன்­மு­றை­யா­ளர்­க­ளி­டம் இருந்து சேத அள­வுக்கு ஏற்ப அப­ரா­தம் வசூ­லிக்­கப்­படும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புலி­கேசி நகர் தொகுதி எம்­எல்­ஏ­வாக இருப்­ப­வர் அகண்ட சீனி­வாச மூர்த்தி. இவ­ரது உற­வி­னர் ஒரு­வர் அண்­மை­யில் சமூக வலைத்­த­ளத்­தில் பதி­விட்ட கருத்து பெரும் சர்ச்­சை­யா­னது.

இதை­ய­டுத்து பொது­மக்­களில் ஒரு எம்­எல்ஏ வீட்டை முற்­று­கை­யிட்­ட­னர்.

அவ­ரது உற­வி­னரை உட­ன­டி­யாக கைது செய்ய வேண்­டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டது.

இந்­நி­லை­யில், போராட்­டத்­தின் போது திடீ­ரென வன்­முறை வெடிக்க, எம்­எல்ஏ வீட்­டின் மீது சிலர் கல்­வீ­சித் தாக்­கு­தல் நடத்­தி­னர். மேலும் சில வாக­னங்­க­ளுக்­கும் தீ வைத்­த­னர்.

இத­னால் கல­வ­ரச்­சூ­ழல் ஏற்­ப­டவே, காவல்­து­றை­யி­னர் விரைந்து வந்து தடி­யடி நடத்தி, கண்­ணீர்ப் புகை குண்­டு­களை வீசி கூட்­டத்­தைக் கலைக்க முற்­பட்­ட­னர்.

எனி­னும் வன்­மு­றை­யா­ளர்­கள் எல்லை மீறி­ய­தால், துப்­பாக்­கிச்­சூடு நடத்­தப்­பட்­டது.

இதில் மூன்று பேர் உயி­ரி­ழந்­த­து­டன், ஐம்­பது போலி­சார் காய­ம­டைந்­த­தா­க­வும் காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில் கல­வ­ரம் குறித்து நீதி விசா­ரணை நடத்­தப்­படும் என்­றும் சேத­ம­டைந்த பொதுச்­சொத்­து­க­ளுக்­கான தொகை வசூ­லிக்­கப்­படும் என்­றும் கர்­நா­டக அரசு தெரி­வித்­துள்­ளது.

உச்ச நீதி­மன்­றத்­தின் உத்­த­ர­வைப் பின்­பற்றி இவ்­வாறு தொகை வசூ­லிக்­கப்­ப­டு­வ­தாக அம்­மா­நில அமைச்­சர் பொம்பை செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!