கட்டாக்: மருந்துகளுக்கான பரிந்துரை சீட்டில் மருத்துவர்கள் தெளிவாக புரியும்படி மருந்தின் பெயர்களை பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும் என்று ஒடிசா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பனிகிரஹி, மருந்துச் சீட்டில் புரியாதபடி மருத்துவர்கள் கிறுக்குவதால் நோயாளிகள், மருந்தாளுநர்கள், போலிஸ், நீதிபதிகள் என எல்லாத் தரப்பினரும் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். மேலும், 2016ஆம் ஆண்டில் மருத்துவ மன்றம் அறிவுறுத்தியதற்கு இணங்க 'கேப்பிட்டல் லெட்டர்' எனப்படும் பெரிய எழுத்துகளில் மருத்துவர்கள் மருந்தின் பெயரை எழுதவேண் டும் என்றும் நீதிபதி கூறினார்.
புரியும்படி எழுத மருத்துவர்களுக்கு நீதிபதி உத்தரவு
1 mins read
படம்: ஊடகம் -

