கொரோனா பீதி: உதவ மறுத்த மக்கள்; மிதிவண்டியில் கொண்டு செல்லப்பட்ட சடலம்

கொரோனா பீதி: உதவ மறுத்த மக்கள்; மிதிவண்டியில் கொண்டு செல்லப்பட்ட சடலம்

1 mins read
70ff3096-9e8b-4833-bc38-de1fc0ad6448
மிதிவண்டியில் சடலம். படம்: ஊடகம் -

பெங்­க­ளூரு: காய்ச்­ச­லால் இறந்­த­வ­ருக்கு கொரோனா கிரு­மித் தொற்று இருக்­கும் என்ற அச்­சம் கார­ண­மாக உடலை அடக்­கம் செய்ய யாரும் உதவி செய்­யா­த­தால் இறந்­த­வ­ரின் உடலை அவ­ரது மகன் மிதி­வண்­டி­யில் தூக்­கிச் சென்­றுள்­ளார்.

துய­ரம் நிறைந்த இந்த அவ­லச் சம்­ப­வம் கர்­நா­டக மாநி­லம் பெல­காவி மாவட்­டத்­தில் நிகழ்ந்­துள்­ளது.

அப்­ப­கு­தி­யில் வசித்த 71 வய­தான சதப்பா பர­சப்பா என்ற முதி­ய­வர் சில தினங்­க­ளுக்கு முன்பு காய்ச்­ச­லால் அவ­திப்­பட்­டுள்­ளார். இதை­ய­டுத்து தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்ட அவர், இரு தினங்­க­ளுக்­குப் பின்­னர் வீடு திரும்­பி­னார்.

இந்­நி­லை­யில் கிரு­மித் தொற்­றுக்­கான பரி­சோ­த­னையை செய்து கொள்­ளும்­படி மருத்­து­வர்­கள் அறி­வு­றுத்தி இருந்­த­னர். எனி­னும் நேற்று முன்­தி­னம் காலை முதி­ய­வர் சதப்பா திடீ­ரென உயி­ரி­ழந்­தார்.

அவர் கொரோனா கிரு­மித் தொற்­றால் உயி­ரி­ழந்­தாக அப்­ப­கு­தி­யில் தக­வல் பர­வி­யது. இத­னால் அவ­ரது உடலை அடக்­கம் செய்ய முடி­யா­மல் குடும்­பத்­தார் தவிக்க நேரிட்­டது.

யாரும் உத­வாத நிலை­யில் சதப்­பா­வின் மகன் தன் நண்­பர் ஒரு­வ­ரு­டன் சேர்ந்து தந்­தை­யின் உடலை மிதி­வண்­டி­யில் வைத்து அடக்­கம் செய்ய கொண்டு சென்­றார். இது தொடர்­பான புகைப்­ப­ட­மும் காணொ­ளிப் பதி­வும் உட­னுக்­கு­டன் சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யா­னது.

இது­கு­றித்­துத் தக­வ­ல­றிந்த அப்­ப­கு­தி­யின் நக­ர­சபை உறுப்­பி­னர் ஒரு­வர் கடைசி நேரத்­தில் சதப்­பா­வின் மகனை தொடர்பு கொண்டு பேசி­னார்.

இதை­ய­டுத்து அவர் அம­ரர் ஊர்­திக்கு ஏற்­பாடு செய்­த­தால் சதப்­பா­வின் உடல் பாதி வழியிலிருந்து அதில் கொண்டு செல்­லப்­பட்டு அடக்­கம் செய்­யப்­பட்­ட­து.