மதுக்கடையைத் திறக்க எதிர்ப்புப் போராட்டம்

மதுக்கடையைத் திறக்க எதிர்ப்புப் போராட்டம்

2 mins read
e853aecf-6d10-4c9a-8193-c7ec3c157f5b
போராட்டம் நடத்திய அனைத்து மக்கள் அரசியல் கட்சியினரை சுற்றிவளைத்து கைது செய்த போலிசார். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: கொரோ­னா­வின் கோரப்­பிடி கொஞ்­ச­மும் தள­ராத நிலை­யில் சென்­னை­யில் நேற்று மதுக் கடை­கள் திறக்­கப்­பட்­டதை எதிர்த்­துப் போராட்­டம் நடை­பெற்­றது.

கொரோனா கிரு­மித்­தொற்று எண்­ணிக்­கை­யில் இந்­திய அள­வில் மகா­ராஷ்­டி­ரா­வுக்கு அடுத்து இரண்­டா­வது இடத்­தில் தமி­ழ­கம் நீடித்து வரு­கிறது. எல்லா மாவட்­டங்­க­ளை­யும் சேர்த்து தமி­ழ­கத்­தில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை மூன்­றரை லட்­சத்தை நெருங்­கு­கிறது.

திங்­கட்­கி­ழமை மட்­டும் 120 பேர் தொற்­றுக்­குப் பலி­யா­கி­விட்­ட­னர். இவர்­க­ளை­யும் சேர்த்து 5,886 உயிர்­களை கொரோனா கிருமி பறித்­து­விட்­டது. மேலும், திங்­கட்­கி­ழமை ஒரே நாளில் 5,890 பேருக்கு புதி­தாக கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

கிரு­மிப் பர­வல் கட்­டுப்­ப­டாத நிலை­யில் ஐந்து மாதங்­க­ளுக்­குப் பிறகு சென்­னை­யில் நேற்று டாஸ்­மாக் மதுக்­க­டை­கள் திறக்­கப்­பட்­டன. அதற்கு சில நிபந்­த­னை­களும் விதிக்­கப்­பட்­டி­ருந்­தன. ஒரு கடைக்கு ஒரு நாளைக்கு 500 பேர் வரை மட்­டுமே அனு­மதி. அதற்­காக மணிக்­கொரு முறை 'டோக்­கன்' வழங்­கப்­பட்­டது. முகக்­க­வ­சம் அணி­யா­த­வர்­க­ளுக்கு டோக்­கன் மறுக்­கப்­பட்­டுள்­ளது.

மதுப்­பி­ரி­யர்­கள் கூட்­டத்தை கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் டாஸ்­மாக் கடை­கள் முன்பு தடுப்­பு­கள் அமைக்­கப்­பட்­டன. ஆயி­னும் ஒரு­சில கடை­கள் தவிர மதுக்­க­டை­களில் நேற்று கூட்­டம் அவ்­வ­ள­வா­கக் காணப்­ப­ட­வில்லை. முற்­ப­கல் 11.30 மணிக்கு பெரும்­பா­லான கடை­களில் ஐந்து முதல் பத்­துப் பேர் வரை­தான் வரி­சை­யில் நின்­றி­ருந்­த­தாக த ஹிண்டு நாளி­தழ் தெரி­வித்­தது. கொரோனா கட்­டுப்­ப­டாத நிலை­யில் மதுக்­க­டை­க­ளைத் திறக்க வேண்­டாம் என பல்­வேறு அர­சி­யல் கட்­சி­யி­ன­ரும் கோரிக்கை விடுத்­தி­ருந்­த­னர். குறிப்­பாக திமுக தலை­வர் மு.க.ஸ்டா­லின் நேற்று முன்­தி­னம் கூறு­கை­யில் மதுக்­க­டை­கள் திறக்­கப்­பட்­டால் கிரு­மித்­தொற்று அதி­க­ரிக்­கும் என்­றார்.

இந்­நி­லை­யில் சென்னை அண்ணா நக­ரில் மதுக்­க­டை­கள் திறக்­கப்­பட்­டதை எதிர்த்து போராட்­டம் நடத்­தப்­பட்­டது. அனைத்து மக்­கள் அர­சி­யல் கட்­சி­யைச் சேர்ந்த மூ.ராஜேஸ்­வரி பிரியா தலை­மை­யில் ஏரா­ள­மா­னோர் ஒன்­று­கூடி டாஸ்­மாக் மதுக்­க­டை­கள் முன் நின்று எதிர்ப்பு முழக்­கம் எழுப்பி ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னர்.

தக­வ­ல­றிந்து அங்கு வந்த போலி­சார் அனு­மதி இன்றி போராட்­டம் நடத்­தி­ய­தற்­காக ராஜேஸ்­வரி பிரியா உள்­ளிட்ட 15 பேரை கைது செய்­த­னர். "கொரோனா முற்­றி­லும் ஒழிக்­கப்­ப­டாத நிலை­யில் டாஸ்­மாக் கடை­களை திறக்­க­வேண்­டிய அவ­சி­யம் என்ன. சென்­னை­யில் கிரு­மித்­தொற்று அதி­கம் உள்ள நிலை­யில் அவ­சர அவ­ச­ர­மாக மதுக் கடை­களை திறப்­பது தொற்றை மேலும் அதி­க­ரிக்­கவே செய்­யும்," என ராஜேஸ்வரி கூறி­னார்.