அதிகரிக்கும் பரிசோதனை: குணமடைவோரும் அதிகம்

அதிகரிக்கும் பரிசோதனை: குணமடைவோரும் அதிகம்

2 mins read
bbd53988-fc5a-4cd1-a036-fab2b8c639ce
அகமதாபாத் நகர காவல்துறை தலைமையகத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு நேற்று கொவிட்-19 தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனை நடத்தப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ் -

புதுடெல்லி: இந்­தி­யா­வில் ஒரே நாளில் 8.99 லட்­சம் மாதி­ரி­கள் பரி­சோ­திக்­கப்­பட்­டுள்­ளன. இதை­ய­டுத்து தின­மும் 10 லட்­சம் பரி­சோ­த­னை­கள் என்ற இலக்கை விரை­வில் அடைய முடி­யும் என சுகா­தார அமைச்சு நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளது.

நாடு முழு­வ­தும் கொரோனா கிரு­மித் தொற்­றால் பலர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனினும் பாதிப்பு எண்­ணிக்கை சற்றே குறையத் தொடங்கியுள்ளது. மேலும், கொவிட்-19 நோயி­லி­ருந்து குண­ம­டை­வோ­ரின் எண்­ணிக்­கை­அதி­க­ரித்து வரு­கிறது.

கிரு­மித் தொற்றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­யாக நாடு முழு­வ­தும் மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­ப­டு­கிறது. இதன்­வழி முன்­கூட்­டியே பாதிப்­பைக் கண்­ட­றி­வ­தன் மூலம் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுக்­குள் கொண்­டு­வர முடி­யும் என நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இது­வரை 30 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான மாதி­ரி­கள் பரி­சோ­திக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் 8.99 லட்­சம் மாதி­ரி­கள் சோதிக்­கப்­பட்­ட­தா­க­வும் இது புதிய உச்­சம் என்­றும் மத்திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

பரி­சோ­தனை எண்­ணிக்­கையை உயர்த்­தி­ய­தால் பாதிப்பு எண்­ணிக்கை குறைந்­துள்­ளது.

இதற்­கி­டையே நேற்று முன்­தினம் புதி­தாக கிருமி தொற்­றி­யோர் எண்­ணிக்கை 55,079ஆக பதி­வாகி உள்­ளது. அண்­மைய சில தினங்­க­ளாக அன்­றா­டம் பதி­வாகி வந்த புதிய நோய்த்­தொற்று சம்ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 60 ஆயி­ரத்­தைக் கடந்­தி­ருந்­தது.

இந்­நி­லை­யில் நாடு முழு­வ­தும் சுமார் ஒன்­பது லட்­சம் மாதி­ரி­கள் பரி­சோ­திக்­கப்­பட்ட நிலை­யில் புதி­தாக கிருமி தொற்­றி­யோ­ரின் எண்­ணிக்கை சரி­வ­டைந்­துள்­ளது.

கொவிட்-19 நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 2.7 மில்­லி­ய­னைக் கடந்­துள்­ளது. இது­வரை 1.97 மில்­லி­யன் பேர் குண­ம­டைந்­துள்­ள­னர். இது மொத்த நோயா­ளி­க­ளின் எண்­ணிக்­கை­யில் 73.17 விழுக்­கா­டா­கும்.

தற்­போது 673,166 பேர் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். இந்­தி­யா­வில் கிரு­மித் தொற்­றால் ஏற்­படும் உயி­ரி­ழப்பு விகி­தம் 1.9 விழுக்­கா­டாக உள்­ளது.

ஒட்­டு­மொத்த உயி­ரி­ழப்பு 51 ஆயி­ரத்து 797ஆக அதி­க­ரித்­துள்­ளது.

மகா­ராஷ்­டி­ரா­வில் நேற்று முன்­தி­னம் 228 பேர் உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து, ஒட்­டு­மொத்த பலி எண்­ணிக்கை 20 ஆயி­ரத்­தைக் கடந்­துள்­ளது.

டெல்­லி­யில் ஒட்­டு­மொத்த உயி­ரி­ழப்பு 4,214ஆக அதி­க­ரித்­துள்­ளது. குஜ­ராத்­தில் 14 ஆயி­ரத்­துக்­கும் அதி­க­மா­னோர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். அங்கு இது­வரை 2,800 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

கர்­நா­ட­கா­வில் பலி எண்­ணிக்கை 4,062ஆக அதி­க­ரித்­துள்­ளது. கேர­ளா­வில் 169 பேர் பலி­யா­கி­யுள்­ள­னர்.