ஒரே நாளில் 64,531 பேர் பாதிப்பு

ஒரே நாளில் 64,531 பேர் பாதிப்பு

1 mins read
002cedc2-657e-4e1a-8658-154bfe62050d
ஹைதராபாத்தில் நடத்தப்படும் பரிசோதனை. படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.76 மில்லியனைக் கடந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரேநாளில் 1,092 பேர் கொவிட்-19 நோயால் உயிரிழந்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகளின் பலனாக இந்தியாவில் கிருமித் தொற்றால் உயிரிழப்போர் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் குணமடையும் விகிதமும் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்­க­ளாக அன்­றா­டம் பதி­வா­கும் புதிய கிரு­மித் தொற்­றுச் சம்­ப­வங்­கள் 60 ஆயி­ரத்­தைக் கடந்து பதி­வா­கின. திங்­கட்­கி­ழமை இந்த எண்­ணிக்கை 57 ஆயி­ர­மா­கக் குறைந்­தது. இந்­நி­லை­யில் செவ்­வாய்க்­கி­ழமை மீண்­டும் 60 ஆயி­ரத்­தைக் கடந்­துள்­ளது.

நாடு முழு­வ­தும் இது­வரை 2.76 மில்­லி­யன் பேர் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் மரண எண்­ணிக்கை 52,889 ஆக அதி­க­ரித்­துள்­ளது. நேற்று முன்­தி­னம் ஒரே­நா­ளில் 64,531 பேர் புதி­தாக கிரு­மித் தொற்­றுக்கு ஆளாகி உள்­ள­னர்.

அதே­ச­ம­யம் இது­வரை 2 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோர் கொவிட்-19 நோயி­லி­ருந்து குண­ம­டைந்­துள்­ள­னர். உயி­ரி­ழப்­போர் விகி­தம் 1.9 விழுக்­கா­டா­க­வும் குண­ம­டைந்­தோர் விகி­தம் 73.6 விழுக்­கா­டா­க­வும் உள்­ளன.