திருவனந்தபுரம்: கேரளாவில் முதியவர்கள் பலர் கொரோனா பிடியில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வருகின்றனர். ஆலுவா பகுதியைச் சேர்ந்த பரீத் என்பவரும் கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்துள்ளார்.
103 வயதான இவருக்கு ஜூலை 28ஆம் தேதி கிருமித்தொற்று இருப்பது உறுதியானது. இதனால் எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் 20 நாட்களில் முழுமையாகக் குணமடைந்த பரீத் நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார்.

