இந்தியாவில் 4 பேரில் ஒருவருக்கு கொரோனா: ஆய்வு மூலம் கணிப்பு

இந்தியாவில் 4 பேரில் ஒருவருக்கு கொரோனா: ஆய்வு மூலம் கணிப்பு

2 mins read
8532c63d-78da-41ef-b43d-f9ffb1f2a5e5
மும்பை உள்­ளிட்ட இந்­திய நக­ரங்­களில் குடி­சைப் பகு­தி­களில் வசிப்­போ­ரில் 57 விழுக்­காட்­டி­னர் கொரோனா கிரு­மித்­தொற்று பாதிப்­புக்கு ஆளா­கும் அபா­யம் உள்­ள­தாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். படம்: ஏஎப்பி -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் 4 பேரில் ஒரு­வ­ருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருக்­கும் வாய்ப்­புள்­ள­தாக அண்­மைய ஆய்­வின் முடி­வு­கள் தெரி­விக்­கின்­றன.

கிரு­மித்­தொற்று தொடர்­பாக அர­சுத் தரப்பு வெளி­யி­டும் பாதிப்பு விவ­ரங்­களைவிட உண்­மை­யில் அதிக பாதிப்பு ஏற்­பட்­டி­ருக்­கும் என்­கி­றார் மருத்­து­வர் வேலு­மணி.

இவர் தலை­மை­யி­லான 'தைரோ­கேர்' நிறு­வ­னம் நாடு முழு­வ­தும் 2.70 லட்­சம் பேரி­டம் அண்­மை­யில் கொரோனா கிரு­மித்­தொற்று தொடர்­பான ஆய்வை மேற்­கொண்­டது. அதில் கொரோனா கிரு­மிக்கு எதி­ரான நோய் எதிர்ப்பு ஆற்­ற­லின் அளவு குறித்து ஆரா­யப்­பட்­டது.

"இந்த ஆய்­வின்­போது 26 விழுக்­காட்­டி­ன­ருக்கு கிரு­மித்­தொற்றை எதிர்க்­கும் அணுக்­கள் உட­லில் உற்­பத்­தி­யாகி இருப்­பது தெரி­ய­வந்­தது. எனவே, அவர்­க­ளுக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது உறு­தி­யா­கிறது. அப்­ப­டி­யெ­னில் நாடு முழு­வ­தும் நான்­கில் ஒரு­வ­ருக்கு கிரு­மித்­தொற்று இருப்­பது உறு­தி­யா­வ­தாக கணக்­கில் கொள்ள முடி­யும்," என்­கி­றார் வேலு­மணி.

மும்பை உள்­ளிட்ட இந்­திய நக­ரங்­களில் குடி­சைப் பகு­தி­களில் வசிப்­போ­ரில் 57 விழுக்­காட்­டி­னர் கொரோனா கிரு­மித்­தொற்று பாதிப்­புக்கு ஆளா­கும் அபா­யம் உள்­ள­தாக சுட்­டிக்­காட்­டும் அவர், இதே நிலை நீடிக்­கும் பட்­சத்­தில் இந்­தி­யா­வில் கொரோனா கிருமி எதிர்ப்பு அணுக்­கள் உள்­ளோ­ரின் எண்­ணிக்கை டிசம்­பர் மாதத்­துக்­குள் 40 விழுக்­கா­டாக அதி­க­ரிக்­கும் என்­கி­றார்.

இக்­கு­றிப்­பிட்ட ஆய்வை தைர­லோ­கேர் நிறு­வ­னம் நாடு முழு­வ­தும் உள்ள 600 நக­ரங்­களில் சுமார் ஏழு வார, காலம் நடத்தி உள்­ளது.

இதற்­கி­டையே ஹைத­ரா­பாத்­தை சேர்ந்த செல்­லு­லார் மூலக்­கூறு உயி­ரி­யல் நிறு­வ­னம் மற்­றும் இந்­திய ரசா­யன தொழில்­நுட்ப நிறு­வ­னம் ஆகி­ய­வற்­றின் விஞ்­ஞா­னி­கள் ஒருங்­கி­ணைந்து கழி­வு­நீ­ரைப் பயன்­படுத்தி கொரோனா கிரு­மித்­தொற்று தொடர்­பான ஆய்வை மேற்­கொண்­டுள்­ள­னர். இதன்­மூ­லம் பல்­வேறு தக­வல்­கள் தெரி­ய­வந்­துள்­ளன.

கொரோனா கிரு­மித்தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­கள் உடற்­க­ழி­வு­கள் மூல­மாக அத்­தொற்றை வெளி­யேற்­று­வ­தாக மருத்­துவ நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர். இதை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு குறிப்­பிட்ட ஒரு பகு­தி­யில் கிரு­மித்­தொற்று எந்த அள­விற்கு உள்­ளது எனக் கண்­ட­றிய கழி­வு­நீர் மாதி­ரி­களை விஞ்­ஞா­னி­கள் பயன்­ப­டுத்தி உள்­ள­னர்.

ஹைத­ரா­பாத்­ கழி­வு­நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யங்­களில் இருந்து கழி­வு­நீர் மாதி­ரி­களைச் சேக­ரித்து ஆய்வு நடத்­தி­ய­போது, 2 லட்­சம் பேர் கிரு­மித்­தொற்றை வெளி­யேற்றி இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.

அங்கு சுமார் 40 விழுக்­காடு கழிவு­நீர்­தான் சுத்­தி­க­ரிப்பு மையங்­களை வந்­த­டை­கிறது. எனவே ஆய்­வுத் தர­வு­க­ளைக் கொண்டு கணக்­கி­டும்­போது ஹைத­ரா­பாத்­தில் சுமார் 6.6 லட்­சம் பேர் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருக்க வாய்ப்­புள்­ளது என்­கி­றார்­கள் நிபு­ணர்­கள்.