'இந்திய கடற்படை எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும்'

'இந்திய கடற்படை எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும்'

2 mins read
c7efff7d-d1da-4c9c-859b-5c13ca9913f8
ராஜ்நாத் சிங். படம்: ஊடகம் -

சீனாவுக்கு மறைமுக பதிலடி: கடற்படை மாநாட்டில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்

புதுடெல்லி: தேசத்தின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் இந்தியக் கடற்படை வகித்த பங்கு பாராட்டுக்குரியது என மத்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற கடற்படை மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்திய கடற்படை எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது எனக் குறிப்பிட்டார்.

இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை நீடித்து வரும் நிலையில் இந்தியக் கடற்படைத் தளபதிகள் பங்கேற்கும் மூன்று நாள் மாநாடு புதுடெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இம்மாநாட்டில் மத்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

மூன்று நாள் நிகழ்­வு­க­ளின்­போது கடற்­ப­டை­யின் செயல்­பா­டு­கள், பயிற்சி மற்­றும் நிர்­வாக நட­வ­டிக்­கை­கள், பாது­காப்பு ஏற்­பா­டு­கள் குறித்து விரி­வாக விவா­திக்­கப்­படு­கிறது.

மேலும் பிற நாடு­க­ளு­டன் இணைந்து மேற்­கொள்­ளும் கூட்டுப் பயிற்­சித் திட்­டங்­கள் குறித்­தும் இம்­மா­நாட்­டில் விவா­திக்­கப்­படும் என்­றும் அமெ­ரிக்கா, ஜப்­பான் நாடு­க­ளு­டன் மேற்­கொள்­ளப்­படும் கடற்­பா­து­காப்புப் பயிற்சி நட­வ­டிக்­கை­களில் ஆஸ்­தி­ரே­லி­யாவை இணைத்­துக் கொள்­வது குறித்து மாநாட்­டில் விவா­திக்­கப்­பட உள்­ள­தா­க­வும் கடற்­படை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

பதற்­ற­மான பகு­தி­க­ளி­லும்­கூட இந்­தி­யக் கடற்­படை அதன் கப்­பல்­கள் மற்­றும் விமா­னங்­களை நிலை­நி­றுத்­தும் செயல்­தி­றன் கொண்­டது என்று குறிப்­பிட்ட அமைச்­சர் ராஜ்­நாத் சிங், இந்­தி­யக் கடற்­ப­டை­யின் ஆற்­றல் குறித்து தமக்கு முழு நம்­பிக்கை உள்­ளது என தெரி­வித்­தார்.

"கொரோனா தொற்றால் எழும் சவால்களை ஏற்றுக்கொண்டு நிர்வாகம் மற்றும் நவீனமயமாக்கல் முயற்சிகளில் இந்தியக் கடற்படை தொடர்ந்து முன்னேறி வருகிறது.

"கொரோனா கிருமித்தொற்றால் ஈரான், மாலத்தீவு, உள்ளிட்ட பல நாடுகளில் சிக்கித் தவித்த சுமார் 4 ஆயிரம் இந்தியர்களை 'ஆபரேஷன் சமுத்திரா சேது' திட்டம் மூலம் இந்தியா அழைத்து வந்து தேசத்தின் நலனுக்காக கடற்படை விரிவாகப் பங்களித்துள்ளது என்றார் ராஜ்நாத் சிங.