பெரும் தாக்குதலுக்குத் திட்டம்; டெல்லியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத சந்தேக நபர் கைது

2 mins read
e0513292-06a9-4180-bbac-b8864ee08758
டெல்லி புத்த ஜெயந்தி பூங்காவில் மூட்டை மூட்டை யாகப் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெடி மருந்துகளை போலிசார் தோண்டி எடுத்தனர். சந்தேக நபர் கைதானதால் டெல்லியில் பதற்றம் நீடிக்கிறது.படம்: ஏஎஃப்பி -

இந்­திய தலை­ந­கர் டெல்­லி­யில் ஐஎஸ்­ஐ­எஸ் பங்­க­ர­வாத சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து புது­டெல்­லி­யி­லும் அண்டை மாநி­ல­மான உத்­த­ரப் பிர­தே­சத்­தி­லும் பெரும் பதற்­றம் தொட­ரு­கிறது. அந்த மாநி­லத்­தின் நொய்டா நக­ருக்­கும் டெல்லி நக­ருக்­கும் இடை­யி­லான எல்­லைப் பகு­தி­யில் செல்­லும் வாக­னங்­கள் அனைத்­தும் நேற்று பாது­காப்­புப் படை­யி­ன­ரின் சோத­னைக்கு உள்­ளா­யின.

புல­னாய்­வுத் தக­வல் ஒன்­றின் அடிப்­ப­டை­யில் சந்­தேக நபரை டெல்லி முழு­வ­தும் தேடிய போலி­சார் வெள்­ளிக்­கி­ழமை இரவு 11,30 மணி­ய­ள­வில் அவ­ரை கைது செய்­ த­னர். அவ­ரைப் பிடிக்க முயன்­ற­போது துப்­பாக்­கிச்­சூடு நடத்­தப்­பட்­டது.

டெல்­லி­யின் தௌலா குவான் வட்­டா­ரத்­தில் போலி­சா­ரால் சுற்­றி

­வ­ளைக்­கப்­பட்ட அந்த பயங்­க­ர­வாத சந்­தேக நப­ரின் பெயர் அபு யூசுஃப் என்று அதி­கா­ரி­கள் கூறி­னர்.

அவ­ரி­டம் இருந்து கைப்­பற்­றப்­பட்ட சமை­யல் குக்­கர் பாத்­தி­ரங்­கள் இரண்­டில் சுமார் 15 கிலோ எடை­யுள்ள வெடி­ம­ருந்­து­கள் நிரப்­பப்­பட்டு வெடிக்­கும் சாத­னங்­க­ளாக உரு­வாக்­கப்­பட்டு இருந்­தன. கைத்­துப்­பாக்கி ஒன்­றும் அந்­ந­ப­ரி­டம் இருந்து பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் மூட்டை மூட்டையாகப் பதுக்கி வைக்கப்பட்டு இருந்து வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.

பலத்த காவல் நிறைந்த சிறப்­புச் சிறை­யில் எட்டு நாள் விசா­ர­ணைக் காவ­லில் அவர் அடைக்­கப்­பட்­டார். கைது செய்­யப்­ப­டு­முன் டெல்லி முழு­வ­தும் அவர் சுற்­றிப் பார்த்து பெரிய அளவில் தாக்­கு­தல் நடத்­து­வ­தற்கு ஏது­வான இடங்­ளைத் தேர்வு செய்­த­தாக போலிஸ் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

தனி நப­ராக இந்­தி­யா­வுக்­குள் அவர் நட­மா­டி­னாரா அல்­லது அவ­ரது கூட்­டா­ளி­கள் இந்­தி­யா­வின் எந்­தப் பகு­தி­யி­லா­வது ஒளிந்­தி­ருக்­கி­றார்­களா என்ற விவ­ரங்­கள் விசா­ரணை மூலம் திரட்­டப்­பட்டு வரு­வ­தா­க­வும் போலி­சார் கூறி­னர்.