ஒரே நாளில் ஒரு மில்லியன் மாதிரிகள் பரிசோதனை

ஒரே நாளில் ஒரு மில்லியன் மாதிரிகள் பரிசோதனை

1 mins read
7cd49a91-aabf-47c3-b891-b396869f436e
பஞ்சாப்பின் அமிர்தரசில் வெளியூர்களுக்குச் செல்பவர்கள் சரியான அனுமதியைப் பெற்றுள்ளனரா என்று காவல்துறை அதிகாரிகள் சரிபார்க்கின்றனர். ஏஎப்பி -

புதுடெல்லி: நாடு முழு­வ­தும் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை 3 மில்­லி­யனை நெருங்­கி­யுள்­ளது. சுமார் 55 ஆயி­ரம் பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

நேற்று முன்­தி­னம் ஒரே­நா­ளில் ஒரு மில்­லி­யன் மாதி­ரி­கள் பரி­சோ­திக்­கப்­பட்­டுள்­ளன. தின­மும் குறைந்­த­பட்­சம் ஒரு மில்­லி­யன் மாதி­ரி­க­ளைப் பரி­சோ­திக்க வேண்­டு­மென மத்­திய சுகா­தா­ரத்துறை அமைச்சு இலக்கு நிர்­ண­யித்­தது. அந்த இலக்கு தற்­போது எட்­டப்­பட்­டுள்­ளது.

கடந்த 21 நாட்­களில் கொவிட்-19 நோயி­லி­ருந்து குண­ம­டைந்­தோர் விகி­தம் நன்கு அதி­க­ரித்­துள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் புதி­தாக 69,878 பேருக்கு கிருமி தொற்­றி­யுள்­ளது. அதே­வே­ளை­யில் ஒரே நாளில் சுமார் 63 ஆயி­ரம் பேர் நோயி­லி­ருந்து குண­ம­டைந்­துள்­ள­னர்.

இத­னால் குண­ம­டை­யும் விகி­தம் 74.69 விழுக்­கா­டாக அதி­க­ரித்­துள்­ளது.

நாடு முழு­வ­தும் இது­வரை 2.22 மில்­லி­யன் நோயா­ளி­கள் கொவிட்-19 நோயி­லி­ருந்து குண­ம­டைந்­துள்­ள­னர்.