இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 மில்லியனைத் தாண்டியது: கடந்த 24 மணி நேரத்தில் 69,239 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனைக் கடந்தது. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 69,239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று காலை நிலவரப்படி அங்கு 3,044,940 பேர் பாதிப்புக்குள்ளாகினர். இதுவரை 56,706 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 65,000ஐ கடந்த வண்ணம் உள்ளது. அதிவேகமாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளைவிட இந்தியாவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சுமார் 1.3 பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் கடந்த வாரத்தில் கிருமித்தொற்று எண்ணிக்கை 10 விழுக்காடு அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் இதுவரை 292,174 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 6,231 பேர் உயிரிழந்தனர். கடந்த வாரத்தில் கிருமித்தொற்று அங்கு 1% உயர்ந்தது.

முன்பு புதுடெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வந்த கிருமித்தொற்று, தற்போது மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள கிராமப்புறங்களிலும் அதிகரித்து வருகிறது. ஆனால், அந்த கிராமங்களில் போதிய அளவுக்கு மருத்துவ வசதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!